Posted by: Vickyalpha
« on: December 19, 2018, 09:24:31 PM »
கல்லெறியப்படும்படி கொண்டு வரப்பட்ட பெண்ணை யேசு பார்த்து
"..உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை, நீ போ, "இனிப் பாவஞ்செய்யாதே" என்றார்".
அதாவது உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது, எனவே இனி பாவம் செய்யாதே என்று சொன்னார். அடுத்த வசனத்தில்
".. நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் "இருளிலே நடவாமல்" ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்".
இங்கே "இனி பாவம் செய்யாதே" , "இருளிலே நடவாமல்" போன்ற வார்த்தைகள் எதைக்குறிக்கிறது??
உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்ட பின்பு மீண்டும் பாவத்தில் போய் விழாதீர்கள், உங்களை கிறிஸ்து வெளிச்சமாக்கின பின்பு மீண்டும் இருளிலே நடவாதீர்கள் என்றே போதிக்கிறது.
ஆனால் இன்று hyper grace கொள்கையை அடிப்படையாக கொண்ட போதனைகளும், அதை பின்பற்றுகிறவர்களும் இதனை அப்படியே மாற்றி
"நாம் நியாயப்பிரமானத்திற்கு விடுவிக்கப்பட்டு, கிருபைக்கு கீழ்ப்பட்டிருக்கிறபடியினால் நாம் எவ்வளவு பாவம் வேண்டுமானாலும் செய்யலாம், அதைக்குறித்து பயப்படவேண்டியதில்லை, ஏனெனில் நாம் செய்த பாவங்கள், செய்யப்போகும் பாவங்கள் ஏற்கனவே மன்னிக்கப்பட்டது" என்று தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.
இவ்வளவு தெளிவாய் பேசுபவர்களுக்கு
"தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.
எபிரேயர் 10:29" போன்ற வசனங்கள் இருப்பது தெரியாதா இல்லை தெரிந்துகொண்டே மறைக்கிறார்களா என்று புரியவில்லை.
இந்த hyper grace கொள்கைக்காரர்களை பார்க்கும் போது
அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
வெளிப்படுத்தின விசேஷம் 22:11-12
என்ற வசனம்தான் நினைவுக்கு வருகிறது.