Posted by: udaya
« on: October 13, 2018, 08:32:53 AM »
@:ஆதாம் ,ஏவாள் ,நோவா ஆகியவர்களின் பெயர்களை ஆராய்ந்து பார்த்த மொழியியல் வல்லுநர்கள் அவைகள் யாவும் தமிழ் பெயர்களே என்று சொல்கிறார்கள்.
யார் அந்த " மொழியியல் வல்லுநர்கள் " ? ஏதாவது link இருந்தால் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .
நான் அறிந்த வரையில் , எபிரேய மொழியில், " ஆதாமா " என்றால் " மண் " என்று கேள்விப்பட்டிருக்கிறேன் .
ஆதாம் என்றால் மண்ணால் ஆனவன் என்றும் அர்த்தம் .
@:நோவா காலத்தில் நடந்த Nova 's Flood என்பது தென் தமிழகத்தில் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் இருந்த குமரி கண்டத்தை பற்றியது என்று சொல்கிறார்கள்.
சற்தேகம்தான்......ஆதியாகமம் 9:20 ல் சொல்லப்பட்டிருக்கும் திராட்சை பயிர் பாலஸ்தீனா பகுதியை சேர்ந்தது .