First .....sorry for the long post.
Second ....disclaimer :
இது , கடவுளை குற்றப்படுத்துவதற்காகவோ , கடவுளின் சொற்களில் குறை கண்டுபிடிப்பதற்காகவோ எழுதப்பட்டது அல்ல. பரிசுத்த வேதாகமத்தில் காணப்படுகிற முரண்பாடுகளை சுட்டிக்காட்டவும் , இங்கு கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கவுமே இதனை எழுதுகிறேன் .
____________________________________________________
commandment :
மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; யாத்திராகமம் 20 :4
violation :
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை, கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார். எண்ணாகமம் 21 :8
தன்னுடைய கற்பனையை மீற சொன்னதும் அல்லாமல் , பாம்பு கடிக்கு சர்வ வல்லமை உடைய தேவனின் பரிகாரமும் சிறப்பாக இல்லை . ( இந்துக்களின் " நாக வழிபாடு " இதுதானோ ?)
_____________________________________________________
commandment :
கொலை செய்யாதிருப்பாயாக.
யாத்திராகமம் 20:13
violation :
தன் மாடு வழக்கமாய் முட்டுகிற மாடாயிருந்து, அது அதின் எஜமானுக்கு அறிவிக்கப்பட்டும், அவன் அதைக் கட்டி வைக்காததினால், அது ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது கொன்று போட்டால், மாடும் கல்லெறியப்படவேண்டும், அதின் எஜமானும் கொலை செய்யப்படவேண்டும். யாத்திராகமம் 21 :29
ஆறுநாளும் வேலைசெய்யலாம். ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள். அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது. ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும்.
யாத்திராகமம் 31:15
அஞ்சனம் பார்க்கிறவர்களும் குறிசொல்லுகிறவர்களுமாயிருக்கிற புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கொலைசெய்யப்பட வேண்டும், அவர்கள்மேல் கல்லெறிவார்களாக, அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருக்கக்கடவது என்று சொல்லு என்றார்
லேவியராகமம் 20 :27
ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபச்சாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபச்சாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள்.
லேவியராகமம் 20 :10
(ஆனால் தாவீதுக்கு இது பொருந்தாது !!!!!)
ஆரோனையும் அவன் குமாரரையுமோ, தங்கள் ஆசாரிய ஊழியத்தைச் செய்வதற்காக நியமிக்கக்கடவாய், அந்த ஊழியத்தைச் செய்யும்படி சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படக்கடவன் என்றார். எண்ணாகமம் 3 :10
வாசஸ்தலம் புறப்படும்போது, லேவியர் அதை இறக்கிவைத்து, அது ஸ்தாபனம் பண்ணப்படும்போது, லேவியர் அதை எடுத்து நிறுத்தக்கடவர்கள்,; அந்நியன் அதற்குச் சமீபத்தில் வந்தால் கொலை செய்யப்படக்கடவன். எண்ணாகமம் 1 :51
சீனாய் மலை மீது கொலை செய்ய கூடாது என்ற கற்பனையை மோசேவிடம் கொடுத்த தேவனாகிய கர்த்தர் , மலையை விட்டு மோசே கீழே இறங்கியவுடன் சொன்ன சொல் ....கொலை செய்வாயாக .
அவன் அவர்களை நோக்கி: உங்களில் ஒவ்வொருவனும் தன் பட்டயத்தைத் தன் அரையிலே கட்டிக்கொண்டு, பாளயமெங்கும் உள்ளும் புறம்பும் வாசலுக்கு வாசல் போய், ஒவ்வொருவனும் தன் தன் சகோதரனையும் ஒவ்வொருவனும் தன் தன் சிநேகிதனையும் ஒவ்வொருவனும் தன் தன் அயலானையும் கொன்றுபோடக்கடவன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான். யாத்திராகமம் 32 :27
இன்னும் ஏராளம் .....இடம் போதாது .
_____________________________________________________
commandment :
விபசாரம் செய்யாதிருப்பாயாக.
யாத்திராகமம் 20:14
violation :
கர்த்தர் ஓசியாவைக் கொண்டு உரைக்கத்தொடங்கினபோது, கர்த்தர் ஓசியாவை நோக்கி: நீ போய், ஒரு சோரஸ்திரீயையும் சோரப்பிள்ளைகளையும் உன்னிடமாகச் சேர்த்துக் கொள்;, தேசம் கர்த்தரைவிட்டு விலகிச் சோரம்போயிற்று என்றார்.
ஓசியா 1 :2
அவன் போய், திப்லாயிமின் குமாரத்தியாகிய கோமேரைச் சேர்த்துக் கொண்டான் அவள் கர்ப்பந்தரித்து, அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.
ஓசியா 1 :3
_____________________________________________________
commandment :
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
யாத்திராகமம் 20 :12
violation :
யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
லூக்கா 14 :26
(பெற்றோரை வெறுத்து , ஆனால் கனம்பண்ணுவது எப்படி ? )
வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். லூக்கா 9 :59
அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார்.
லூக்கா 9 :60
(பெற்றோரை கனம்பண்ண அனுமதி இல்லை
)
இயேசு கிறிஸ்துகூட , தனது தாயை "ஸ்திரியே" என்றுதான் அழைத்தார் .பலர் முன்னிலையில் தனது பெற்றோர்களை அவர் புறக்கணித்தார் .
மத்தேயு 12 :47,48 மாற்கு 3:32,33.
_____________________________________________________
commandment :
ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக.
யாத்திராகமம் 20 :8
ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள். அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
யாத்திராகமம் 20 :10
இயேசு கிறிஸ்து இந்த கற்பனையை மீறியது பற்றி வேதாகம்மே பதிவு செய்துள்ளது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று .
_____________________________________________________
commandment :
களவு செய்யாதிருப்பாயாக.
யாத்திராகமம் 20 :15
violation :
வெள்ளியைக் கொள்ளையிடுங்கள். பொன்னையும் கொள்ளையிடுங்கள். சம்பத்துக்கு முடிவில்லை. இச்சிக்கப்படத்தக்க சகலவித பொருட்களும் இருக்கிறது.
நாகூம் 2 :9
ஓசன்னா பவனிக்காக கழுதையையும் அதன் குட்டியையும் அவிழ்த்து வரும்படி இயேசு சீஷர்களிடம் கூறியதுபற்றி மத்தேயு 21:1-7 , மாற்கு 11:1-6 , லூக்கா 19:29-35 ல் கூறப்பட்டுள்ளது . கழுதையின் உரிமையாளரைக் கேட்டு கழுதையை அவிழ்த்தால் அது களவாகாது.
ரோட்டில் நிற்கும் காரை , அதன் உரிமையாளருக்கு தெரியாமல் , கிளப்பிக்கொண்டுபோய் , சுவிஷேச ஊழியத்திற்கு பயன்படுத்தினால்கூட அது களவுதான்.
மேலும் இஸ்ரவேல் மக்களை எகிப்தை கொள்ளயிட சொன்னது தள்ளுபடியாகிறது. (10 கற்பனை கிடைப்பதற்கு முன் நடந்தது ).
10 கற்பனைகள முரண்படுத்தும் பகுதிகளை மட்டும் சுட்டிக்காட்டியுள்ளேன் (எனக்கு தெரிந்த வரை ).