ஆவியில் பிறத்தலைக் குறித்து நிக்கொதேமுவிற்கு இயேசு கிறிஸ்து அளித்த விளக்கம் இதோ...
காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது: ஆவியினாலும் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார். யோவான் 3 :8
அதாவது ஆவியில் பிறந்தவன் தனக்கு இஷ்டமான இடத்திற்கு போகிறான் வருகிறான் . அவன் பேச்சை கேட்க முடிந்தாலும் அவன் இன்ன இடத்திலிருந்து வருகிறானென்றும், இன்ன இடத்துக்குப் போகிறானென்றும் தெரியாது.
நிக்கொதேமு எப்படியோ எனக்கு தெரியாது , ஆனா
இந்த விளக்கம் தற்போது எனக்கு 100% பொருந்துகிறது . ......பிறகு ஏன் ஆவியில் பிறக்க வேண்டும் என்று திரும்ப திரும்ப சொல்லறாங்கன்னு புரியமாட்டேங்குது .
ஒரு வேளை இயேசு கிறிஸ்துவுக்கு சரியாக விளக்க தெரியலன்னு நீங்க நெனச்சா உங்க விளக்கத்தை கொஞ்சம் கொடுங்க.