@: இயேசுவும் பல இடங்களில் பழைய ஏற்பாட்டை மேற்க்கோளாக காட்டியுள்ளாரே..அது என்ன ...
உண்மைதான் சகோ. தவறுதலாக கூட மேற்கோள் காட்டியுள்ளார் . ...அடுத்த பதிலை பார்க்கவும் .
@: அப்போஸ்தலர்களும் அப்படி கூறியுள்ளனரே அது...
பிசாசுகூட சங்கீதத்தை மேற்கோள் காட்டியுள்ளான் !!! விஷயம் அதுவல்ல . பழைய ஏற்பாடு , புதிய ஏற்பாட்டை நசுக்குகிறது . மட்டுமல்ல , இயேசு கிறிஸ்துவை கடவுளாகவோ ரட்சகராகவோ ஏற்க மறுக்கிறது . அதனால் ......அதை மேற்கோள் காட்டுவதை தவிர்க்க வேண்டும் .
@: ஒரு ஆட்டக்காரன் திறமையாக இருந்தால் அவனை தனது அணிக்காக வாங்கி அவன் திறமையை இவர்கள் பயன்படுத்திக்கொள்வர்.. அது போல சர்பத்தின் தந்திரத்தை சாத்தான் பயன்படுத்திக்கொண்டான்.
ஆக ...சர்ப்பம் வேறு , சாத்தான் வேறு . சரிதானா ?
@: ஒவ்வொரு ஜீவனுக்குள் ஒரு பண்பு உண்டு. மனிதன் வஞ்சிக்கப்படுவது தேவனுக்கு தெரியும்
தொடர்ச்சியாக , பாவம் உருவாகப் போவதும் தெரியும் ?
@: அதனால் முன்னமே சாப்பிட கூடாதெனவும் விளைவும் சொல்லியிருந்தார்.
ஆம், சொல்லியிருந்தார். ஆனால் சொல்லியிருந்த விளைவு ஏற்படவில்லை !!!
@: ஆனால் மனிதனின் உரிமையை அவர் மதித்தார். அவன் சித்தத்தில் அவர் தலையிடுவதில்லை.
மனிதனின் உரிமையை அவர் மதித்தது உண்மயானால் , ஏதேன் தோட்டத்தை விட்டு ஏன் விரட்டினார் ? இன்றும் கூட எரிகிற அக்கினி கடலில் தள்ளுவதாக மிரட்டுகிறாரே
யோனாவின் சித்தத்தில் அவர் தலையிட்டதை படிக்கிறோமே !
@: நம் நாட்டில் பல சட்டங்கள் உள்ளன அது ஒழுங்கை ஏற்ப்படுத்தவே அடிமைபடுத்த அல்ல. (டிராபிக் சிக்னல் இல்லை என்றால் என்னவாகும்.)
அந்த சட்டங்கள் நமக்காக நாமே ஏற்படுத்திக்கொண்டதனால் , அடிமைத்தனம் என்ற பேச்சிற்கே இடமில்லை . தேவனுடைய சட்டங்கள் அப்படி அல்லவே !
@: ஏதேனுக்கு ஒரே ஒரு கட்டளை போதும். அதையும் மீறியதால் தான் தண்டனை.
யாருடைய மீறலினால் யாருக்கு தண்டனை ?
@: பூமியில் ஏராளமான பாவங்கள் நடக்கிறது அது தேவ சித்தமா..
சரியாக தெரியவில்லை .
@: நடப்பதெல்லாம் தேவனுக்கு தெரியுமே ஒழிய எல்லாம் அவர் சித்தமல்ல..
நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் தேவன் , அது நடைபெறாமல் தடுத்து நிறுத்துவதை விட்டு விட்டு , நடந்து முடியும்வரை காத்திருந்து பிறகு தண்டிப்பதுதான் அவர் சித்தமா ?
பாவங்களின் காரணகர்த்தாவை கட்டுப்படுத்துவதை
விடுத்து , நம்மை குறை கூறுவது ஏன் ? எய்தவன் இருக்க அம்பை நோவதேன்