எசேக்கியல் 28 ம் அதிகாரம் 3 உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது . அதில் முதல் 2 பிரிவுகள் தீரு ராஜாவுக்கான தீர்க்கதரிசனங்கள். இதில் சொல்லப்பட்டுள்ள வசனங்களைக் கொண்டு , தீரு ராஜா என்பது சாத்தானைக் குறிக்கிறது என்ற சிலர் நினைக்கின்றனர் . அது சரியல்ல என்பது என் கருத்து .
எசேக்கியல் 28 ம் அதிகாரம் 9,10 வசனங்கள் , தீரு ராஜா ஒரு மனிதன் என்று நிரூபிக்கிறது . சாத்தான் மனிதானாக இருந்திருந்தால் பூமியில் இருந்து பரலோகத்திற்கு போவதும் வருவதுமாக இருந்திருக்க முடியாது .(யோபு புத்தகத்தில் கூறியுள்ளபடி) காரணம்.....
பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. யோவான் - 3:13
ஆக தீரு ராஜா சாத்தான் அல்ல , ஒரு மனிதனே .
அடுத்து....
13 ம் வசனம்..........நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன் , என்ற வாக்கியம் , " தீரு ராஜா = சர்ப்பம் = சாத்தான் " என்ற கருத்தை ஆதரிப்பதாக நம்புகின்றனர் . அதுவும் பிழையே . காரணம்.....ஏதேன் தோட்டத்தில் , ஆரம்பத்தில் , ஆதாம் ஏவாளைத் தவிர வேறு மனிதர்கள் இருந்ததற்கான முகாந்திரம் எதுவுமில்லை .
ஏதேன் தோட்டம் என்றவுடன் ஆதாம் ஏவாள் பாவத்தை மட்டும் சொல்லிவிட்டு கடந்து போகிறோம் . தேவனாகிய கர்த்தர் மனிதனை அங்கிருந்து துரத்திவிட்ட பிறகும் ஏதேன் தோட்டம் அங்கேதான் இருந்தது என்பதை மறக்கக் கூடாது . ஆதாம் வெளியேறிய பிறகு , தீரு ராஜா அங்கு ஏன் இருந்திருக்கக் கூடாது ?
இருந்தாரா ? ஆம் , இருந்தார்.....ஏதேனைக் காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணுப்பட்ட கேருப் ஆக இருந்தார். கீழ்க்கண்ட வசனத்தை கவனிக்கவும்
எசேக்கியல் - 28:14 நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணுப்பட்ட கேருப், தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன், அக்கினிமயமானகற்களின் நடுவே உலாவினாய்.
சரி.....
ஏதேனைக் காப்பாற்றுகிறதற்காக கர்த்தர் கேருபீன்களை நியமித்தாரா ? நியமித்ததை கீழ்க்கண்ட வசனம் உறுதி செய்கிறது .
ஆதியாகமம் - 3;24 அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்.
இப்படியிருக்க , தீரு ராஜா என்பது , சாத்தானைக் குறிக்க எந்த முகாந்திரமும் இல்லை . இந்தப்பகுதியில் கூறப்பட்டிருக்கும் , ஞானவான் , பூரண அழகுள்ளவன் போன்ற குணநலன்கள் தீரு ராஜாவுக்கு பொருந்தாது என்று கூற காரணம் எதுவுமில்லை . மேலும் வசனங்கள் கூறுகிறபடி அவர் பாவம் செய்திருக்கக் கூடும் .
@:ஏனெனில் அதில் உள்ள சில வர்ணனைகள் மனிதனுக்கு பொருந்துவதாய் இல்லை.
எந்த வர்ணனைகள் மனிதனுக்கு பொருந்துவதாய் இல்லை என்று கருதுகிறீர்கள் ?
@:He talk with the force behind the king.
He just talk ABOUT the king.