லூக்கா , தான் எழுதிய நூல், அது எழுதப்பட்ட சூழலை , அதிகாரம் 1:1-4 வரையிலான வசனங்களில் விவரிக்கிறார்.
இதின் சாராம்சம்:
1.ரோம அதிகாரியான தெயோபிலுவுக்கு எழுதுகிறார்.
2. தான் காணாத , ஆனால் கேள்விப்பட்ட சங்கதிகளை பற்றி எழுதுகிறார்.
3. ஆளாளுக்கு சரித்திரம் எழுத முற்பட்டதை கூறுகிறார்.
4. ஆதி முதல் எல்லாவற்றையும் திட்டமாக விசாரித்ததாக கூறுகிறார்.
5. தெயோபிலுவுக்கு கூறப்பட்ட விஷயங்கள் உண்மை என்று கூற முற்படுகிறார்.
ஆனால் , பரிசுத்த ஆவியின் ஏவுதலால் எழுதியதாக எங்கேயும் கூறவில்லை.
( பரிசுத்த ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்டது என்பது நமது நம்பிக்கை )
எனவே , செவிவழி செய்திகளை மட்டும் அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட லூக்கா சுவிசேஷம் , மற்ற சுவிசேஷங்களோடு பல இடங்களில் ஒத்துபோகாமலிருப்பதில் வியப்பில்லை.
உதாரணமாக......
இயேசு பிறந்த பின்னர், நிகழ்ந்ததாக மத்தேயு கூறும் எந்த விஷயத்தையும் லூக்கா கூறவில்லை.
ஏரோதின் கோபத்தினால் அவர் பெற்றோர் எகிப்துக்கு ஓடிப்போனதையொட்டிய நிகழ்வுகளை லூக்கா சரியாக விசாரிக்கவில்லை என்று தெரிகிறது .
( 2 வயதிற்குட்பட்ட ஆண் குழந்தைகளை ஏரோது கொன்ற மிகப்பெரிய விஷயத்தை லூக்கா கேள்விபடவில்லை போலிருக்கிறது.)
மாறாக , மத்தேயு கூறும் எந்த பாதிப்புமின்றி , இயேசு வளர்ந்ததை விவரிக்கிறார்.
இதே போன்று பல முறை மற்ற சுவிசேஷங்களிலிருந்து வேறுபடுகிறார். ஆதி முதல் எல்லாவற்றையும் திட்டமாக விசாரித்ததாக கூறும் லூக்கா , முக்கியமான தகவல்களை அளிக்காமல் விட்டு விட்டார்.
எனவே , பரிசுத்த ஆவியின் ஏவுதலால் , இதை தான் எழுதியதாக அவர் கூறாமல் விட்டதில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை.
ஆக , செவிவழி செய்திகளை மட்டும் அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட லூக்கா சுவிசேஷத்தில் கூறப்படும் விஷயங்களுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிப்பது. !!!!!!!