யூதருக்கு ராஜா
ஒரு சிறு உரையாடல்... ( பார்க் பெஞ்சில்..)
யூ = யூதர். உ = உதயா (கிறித்தவ மத த்தை
சார்ந்தவர்)
உ : சகோ.... உங்க கிட்ட சில விளக்கங்கள்
கேட்கணும்........
யூ : கேளுங்க...
உ : இயேசு கிறிஸ்துவை யூதருக்கு ராஜவா நீங்க
ஏன் ஏத்துக்கல..
யூ : சொல்லறேன்... ஆனா அதுக்கு முன்னாடி,
நான் உங்க கிட்ட ஒரு கேள்வி கேட்கலாமா ?
உ : தாராளமா கேளுங்க...
யூ : பரட்ட தலை, தாடி, நீண்ட அங்கி , தோள்மேல
ஜோல்னா பை...இப்படி ஒருவர் உங்க கிட்ட
வந்து, " நான்தான் இயேசு கிறிஸ்து , இந்த
உலகத்தை நியாயம் தீர்ப்பதற்கு இரண்டாம்
வருகையாக வந்திருக்கிறேன்" என்று
சொன்னா , நீங்க நம்புவீங்களா..நம்ப
மாட்டீங்களா...
உ : நம்ப மாட்டேன்.
யூ : புதிய ஏற்பாட்டிலிருந்து வசனங்களை அள்ளி
வீசறார்னு வெச்சுக்குங்க... அப்பவாவது
நம்புவீங்களா ?
உ : ம்ஹூம்....... நம்ப மாட்டேன்.
யூ : சரி....ரெண்டு மூனு மேஜிக் செஞ்சு
காட்டுரார்னு வெச்சுக்குங்க.....அப்போ..?
உ : அப்பவும்.... நம்ப மாட்டேன்.
யூ : என்னங்க...இவ்வளவு சொல்றார்... இவ்வளவு
செய்றார்.......... நம்ப மாட்டேங்றீங்களே..
உ : இது மட்டுமல்ல ....இன்னும் என்ன
வித்தை செஞ்சாலும் நம்ப மாட்டேன்.
யூ : ஏன்..? ஏன்..? ஏன்.. நம்ப மாட்டேங்றீங்க..
உ : ஏன்னா...இயேசு கிறிஸ்துவின் இரண்டாம்
வருகை எப்படி இருக்கும்னு எங்க வெளி.
விசேஷத்துல சொல்லியிருக்கு..,.பிரதான
தூதனின் எக்காளத்தோடும்
தேவதூதர்களோடும் வானமண்டலங்களில்
மிகுந்த வல்லமையோடு வருவார்னு
எழுதியிருக்கு.......இவர பாருங்க.....பார்த்தா
பரதேசி மாதிரி இருக்குறார்.. ஒரு
செல்போன் கூட இவர்கிட்ட இருக்குமான்னு
தெரியல.... இவரபோய் இயேசு கிறிஸ்துனு
நம்ப சொல்றீங்களா ?....புரியாம பேசாதீங்க.
யூ : அப்போ.... நீங்க மாத்திரம் , உங்க வேதத்துல
எழுதியிருக்கிற மாதிரி இல்லன்னு சொல்லி
ஏத்துக்க மாட்டேங்கறீங்க....நாங்க எங்க
வேதத்துல சொல்லியிருக்கிற யூதருக்கு
ராஜா மாதிரி , இயேசு கிறிஸ்து
இல்லேன்னு சொன்னா , எங்கள குறை
சொல்றீங்க !?!? வணங்கா கழுத்துள்ளவர்கள்,
முரட்டாட்டமுள்ள ஜனங்கள் அது இதுன்னு
உங்க இஷ்டம் போல பேசறீங்க...!?!?
உ : கோப படாதீங்க...என்ன இருந்தாலும் அவர்
பிதாவின் குமாரன் இல்லீங்களா...
யூ : யார் பிதாவின் குமாரன் ? பிதா சொன்னாரா ?
உ : இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றபோது
" இவர் என் நேசகுமாரன் " அப்படீன்னு பிதா
சொன்னார் பாருங்க....
யூ : ஏங்க ...நீங்க உங்க புத்தகத்துல அப்படி எழுதி
வெச்சுக்கிட்டா அதுக்கு நாங்களா பொறுப்பு ?
உ : என்ன .....இப்படி சொல்லிட்டீங்க !!!!
யூ : சகோ......ஒபாமா வீட்டில நான் வளர்ந்தேன்னு
நீங்க சொல்லறீங்கன்னு வெச்சுக்குவோம்...
அதை யார் நம்புவாங்க !?!? ஆனா..
" உதயா எங்க வீட்டுப் பிள்ளை " அப்படீன்னு
ஒபாமா சொன்னார்னா.... எல்லோரும்
நம்புவாங்க !!!!!!! சொல்ல வேண்டியவங்க
சொல்லனும்....புரிஞ்சுதுங்களா ?
உ : புரிஞ்சுதுங்க சகோ....ஆனா.....
யூ : இருங்க ....உங்க ரூட்டுக்கே வர்ரேன்....
"சுவிசேஷங்களில் , இயேசு கிறிஸ்து சொல்லி
இருக்கிற தேற்றரவாளன் நான் தான்னு"
சத்திய சாய்பாபா ஒருமுறை சொன்னார் .
அவர் அப்படி சொன்னார்ங்கறதுக்காக
அவரை தேற்றரவாளனா ஏத்துக்குவீங்களா ?
உ : அதெப்படிங்க முடியும் ?
யூ : தெரியுதுல்ல........ பேச வந்துட்டீங்க....
உ : கொஞ்சம் பொறுங்க...இயேசு கிறிஸ்து
அற்புதங்களை செய்தார், நோயாளிகளை
குணமாக்கினார் . அதற்காகவாவது அவரை
நீங்க ஏத்துக்கொண்டிருக்கலாமல்லவா ?
யூ : சத்திய சாய்பாபா கூட அதிசயங்கள் செய்தார்,
புட்டபர்த்தியில் மருத்துவ மனை கட்டி
இலவசமாக ட்ரீட்மெண்ட் கொடுத்து ,
நோயாளிகளை குணமாக்கினார்
அதற்காகவாவது அவரை தேற்றரவாளனா
நீங்க ஏத்துக்கொண்டிருக்கலாமல்லவா ?
உ : இயேசு கிறிஸ்துவை , சத்திய சாய்பாபாவோடு
தொடர்பு படுத்தி பேசாதீங்க...
யூ : இயேசு கிறிஸ்துவை , நீங்களும்
யெகோவாவோடு தொடர்பு படுத்தி பேசாதீங்க.
உ : சரி ...முடிவா என்னதான் சொல்றீங்க ?
யூ : கிறிஸ்தவர்களாகிய நீங்க எங்க முதுகிலே
சவாரி பண்ணறீங்க.. நியாபகம் வச்சுக்குங்க..
எங்க நடையை குறை சொல்லாதீங்க... எங்க
நடையில் குறை இருக்கிறதா நீங்க நெனச்சா
கீழே இறங்கி நடங்க.......
யூ எழுந்து நடக்க ஆரம்பித்தார்.....
உதயாவும் தன் நடையை கட்டினார்......
யூதர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்
" யூதருடைய ராஜா " தாவீதின் சிங்காசனத்தில் எப்போது அமர போகிறார் ?