@: reply#8
பரிசுத்த வேதாகமம் , நீண்ட கால அளவில் , பலர் எழுதிய நூல் தொகுப்பு .
கால மாறுதல்களாலும் , எழுதிய பலரும் தங்கள் சொந்த கருத்துக்களையும் இடை சொருகிக்கொண்டதாலும் , வேதாகமம் " சீர்மிகு " அந்தஸ்தை இழந்து நிற்கிறது.
மேலும் , வேதாகமத்தில் எந்தெந்த புத்தகங்கள் மற்றும் பகுதிகள் இடம் பெறவேண்டும் என்பதை * மனிதர்கள்தான் * தீர்மானித்தார்கள் , என்ற உண்மையையும் கருத்தில் கொள்வோமானால் , இதில் எந்த அளவு மனித சிந்தனை மற்றும் விருப்பம் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அறிய இயலும்.
ஆகவே , *அறிவுடைமையின் * அடிப்படையில் வேதகம கருத்துக்களை சீர்தூக்கி சிந்தித்து பின்பற்றுவது சாலச்சிறந்த்து என்பது என் கருத்து. ஆனால் , யாரும் சிந்தித்து செயல்பட்டுவிடக்கூடாது என்பதில் , வேதாகம எழுத்தாளர்கள் தெளிவாக உள்ளனர்.
எனவேதான்.........
ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்.
இவ்வுலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன்.
போன்ற வார்த்தைகளினால் , அறிவுடைமை வளர்ந்துவிடாமல் பாதுகாத்தனர்.
அப்போஸ்தலனாகிய பவுல் , மக்களை கட்டுக்குள் கொண்டுவர எடுத்த நடவடிக்கைகளை , தொடர்ந்து வந்த மதத்தலைவர்களும் எடுத்து , இந்நாள் வரை மதத்தையும் தங்களையும் காப்பாற்றிக்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும்....
வேதாகமத்தை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே சிறிது சிறிதாக அரும்பி வருகிறது. இது காலத்தின் கட்டாயம்.
" பூமியின் அஸ்திபாரம் ! " ,
" மலை மேல் ஏறி பூமியின் சகல ராஜ்ஜியங்களையும் காண்பித்தல் " ,
" உலகின் அனைத்து விலங்குகளையும் ஒரு படகில் ஏற்றி மாதக்கணக்கில் நீரில் பயணம் செய்தல் " .....இன்னும் எண்ணற்ற காரியங்களை மக்கள் பொருட்படுத்துவதில்லை.
அந்நிய பாஷை.....இதில் ஒன்று.
Nobody can understand it , translate it , decipher it , decode /encode it , write it , read it , repeat it - atleast once............not even the person who spoke it.
அந்நிய பாஷை என்பது " வரம் " என்றுவேறு கூறுகிறீர்கள் !!..........இருக்கட்டும் ..... தங்களுக்கு இவ்வாறு கருத்துக்கூற அனத்து உரிமையும் உண்டு.ஆனால் , அதை மற்றவர்கள் மீது திணிப்பது, தவிர்க்கப்படவேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.
என்னைப்பொருத்தவரை , என் கருத்துக்களை , இக்கருத்துக்களத்தில் சமர்ப்பிக்கிறேன். யாரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை . எதிர் கருத்து கூறவும் எந்த தடையும் இல்லை.
நானும் , மற்றவர்களை விமர்சிப்பதில்லை.... மாறாக அவர்களின் கருத்துக்களை மட்டும் விமர்சிக்க விரும்புகிறேன்.
தங்களின் மேலான ஒத்துழைப்புக்கு நன்றி.