வேதாகமப்படி இரண்டு மரணங்கள் உள்ளது.
இந்த மூன்று வசனங்களின் மேல் உள்ள வசனங்களை கவனிக்கவும்.
மத்தேயு 16:27, மாற்கு 8:38, லூக்கா 9:26
பொதுவாக இந்த வசனங்கள் சற்றே வேறுப்பட்டிருந்தாலும் ஒரே கருத்தான மறுதலிப்பவர்களுக்கு வரும் பலனை(அதாவது நித்திய மரணம்) குறிக்கிறது.
மத்தேயு 16:28, மாற்கு 9:1, லூக்கா 9:27 ஆகியவை இதன் முந்தின வசனங்களின் தொடர்ச்சி.
ஆகவே அவர் இரண்டாவது மரணமான நித்திய மரணத்தை சொல்கிறார். நித்திய மரணமான இரண்டாம் மரணம் இயேசு கிறிஸ்து தன் இராஜ்ஜித்தி்ல் வந்த பிறகுதான் நிகலும். அப்போது உயிரோடு இருப்பவர்கள் மட்டுமல்ல மரித்தவர்களும் எழுந்தரிப்பார்கள்.
கீழ்கண்ட வசனங்கள் இதை சொல்கிறது....
2 பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள். தானியல் 12 :2
29 அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள். யோவான் 5 :29
12 மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன், அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன, ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது, அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். வெளிப்படுத்தின விசேஷம் 20 :12
13 சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது, மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள் வெளிப்படுத்தின விசேஷம் 20 :13
14 அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. "இது இரண்டாம் மரணம்." வெளிப்படுத்தின விசேஷம் 20 :14
அங்கே கேட்டுக்கொண்டிருப்பவர்களை சொல்வதென்றால் "உங்களில் சிலர்" என்று நேராகவே சொல்லிருக்கலாமே.
"இங்க நிற்கிறவர்களில் சிலர்" என்பதை விளக்க கீழ்க்காணும் வசனம் உதவுமென்று நினைக்கிறேன்.
7 இதோ, மேகங்களுடனே வருகிறார், கண்கள் யாவும் அவரைக் காணும், "அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள், " பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென். வெளிப்படுத்தின விசேஷம் 1 :7