இது ஆவுற கத இல்ல!!!
உங்க எயிம் புரிஞ்சிக்க முயற்சி பன்றதா இருந்தா நீங்க reffer பன்னதுக்கு preaching பன்னிருப்பிங்க.
எப்படியோ உங்களுக்காக இன்னும் கேள்விதறேன்.
இதையும் வட்ச்சி குழப்பிகொங்க.
புலி பசித்தாலும் புல்லைதின்னுமா?
29 பின்னும் தேவன்: இதோ, பூமியின் மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது. ஆதியாகமம் 1 :29
30 பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார். அது அப்படியே ஆயிற்று. ஆதியாகமம் 1 :30
கயினோட மனைவி யார்?
வேற்றுகிரகவாசிகள உள்ளனர் என்று இப்போது வாதாடிக் கொண்டிருக்கிறாரகள் உங்கள் கருத்து?
நான் விக்கிரகத்தோட பின்னனில இருந்துதா வந்தேன் சகோ.
இந்து புராணங்கள் என்று சொல்லப்படும் சிலவைகள், முனிவர் சித்தர் பாடல்களில், கோயில்களில் ஓதப்படும் வேதங்களுக்கு அற்த்தம் தெரியுமா?
நமது புராணங்கள் அனைத்திற்க்கும் மூல மொழி சமஸ்கிருதம்.
Sample:
சஹஸ்ர நாமாவளி
1. ஓம் ஸ்ரீ பிரம்ம புத்திராய நமஹ: சிருஷ்டிகர்த்தாவின் புத்திரரே, போற்றுகிறோம்.
[தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனைத் தந்தருளி…உலகத்தில் அன்பு கூர்ந்தார் – யோவான் 3:16]
2. ஓம் ஸ்ரீ தரித்திர நாராயணாய நமஹ:
ஏழைக் குலத்தில் அவதரித்தவரே, போற்றுகிறோம்.
[அவர் ஐஸ்வரியம் உள்ளவராய் இருந்தும்…உங்கள் நிமித்தம் தரித்திரர் ஆனாரே – IIகொரிந்தியர் 8:9]
3. ஓம் ஸ்ரீ கன்னி சுத்தாய நமஹ: கன்னியின் கர்ப்பத்தில் பரிசுத்தமாய் பிறந்தவரே, போற்றுகிறோம்.
[இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதி ஆகி ஒரு குமாரனைப் பெறுவாள்… - மத்தேயு 1:23]
4. ஓம் ஸ்ரீ உமாத்யாய நமஹ: பரிசுத்த ஆவியினால் பிறந்தவரே, போற்றுகிறோம்.
[பரிசுத்த ஆவி உன்மேல் வரும்…உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் எனப்படும் – லூக்கா 1:35]
5. ஓம் ஸ்ரீ ஸிபிலிஷ்டாய நமஹ: தன்னுடைய மாமிசத்தில் வெளிப்பட்டவரே, போற்றுகிறோம்.
[தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்… - Iதீமோத்தேயு 3:16]
6. ஓம் ஸ்ரீ விதிரிஷ்டாய நமஹ: விருத்தசேதனம் செய்து கொண்டவரே, போற்றுகிறோம்.
[பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே…அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள் – லூக்கா 2:21]
7.ஓம் ஸ்ரீ அஜமுகாய நமஹ: செம்மறி ஆடு முகமானவரே, போற்றுகிறோம்.
[உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி – யோவான் 1:29]
8.ஓம் ஸ்ரீ விருக்ஷ சூல அருதாய நமஹ: சூலம் போன்ற மரத்தில் பலியானவரே, போற்றுகிறோம்.
[மனுஷ குமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக் கொடுக்கப்படுவார் – மத்தேயு 26:2]
9.ஓம் ஸ்ரீ மிருத்யும் ஜெயாய நமஹ: மரணத்தை வென்றவரே, போற்றுகிறோம்.
[அவர் தாம் சொன்னப்படியே உயிர்த்தெழுந்தார் – மத்தேயு 28:6]
10. ஓம் ஸ்ரீ மஹா தேவயாய நமஹ: தேவர்களுக்கெல்லாம் தேவனே, போற்றுகிறோம்.
[கர்த்தர் பெரியவர்…எல்லா தேவர்களுக்கும் மேலானவர் – சங்கீதம் 135:5]
தமேவம் வித்வனாம்ருத இஹ பவதி நன்ய பாண்டா அயனய வித்யதே: இந்த மனிதரை தியானித்து ஏற்றுக்கொண்டு உள்ளத்திலே விசுவாசித்து நாவினால் அர்ச்சித்தால் இந்த உலகத்திலிருந்து விடுதலை கிடைக்கும். இரட்சிப்பிற்கு வேறு மார்க்கம் இல்லை.
~~~~~~~~~~~~
சித்தர்பாடல்கள்:
122
விண்கடந்து நின்றேசோதி
மேல வாசலைத் திறந்து
கண்களிக்க உள்ளுளே கலந்துபுக்கிருந்தபின்
மண்கலந்த மாயமும் மயக்கமும்
மறந்துபோய்
எண்கலந்த ஈசனோடு இசைந்திருப்பது
உண்மையே
(சோதி - இயேசு கிறிஸ்து பரத்திற்கு ஏறிச்சென்று கண்கள்கான உள்ளே பிரவேசித்தபின் மாயையான இவ்வுலகை விட்டு ஈசானோடு(சமஸ்கிருத வார்த்தை கடவுள், இந்தி சமஸ்கிருதத்தை தழுவி இருப்பதால் இந்தி வேதாகமத்திலும் கடவுளுக்கு ஈஸ்வர் என்றுதான் வளங்குவர்) சேர்வது உண்மையே!!!
131
உங்கள் தேவன் எங்கள் தேவன்
என்றிரண்டு தேவரோ!
அங்கும் இங்குமாய் இரண்டு
தேவரும் இருப்பரோ!
அங்கும்இங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி
ஒன்றலோ
வங்கவாரம் சொன்னபேர்கள்
வாய்புழுத்து மால்வரே!
உண்மையில் நாம் நமது வேதத்தை சரியாக அறிந்திருந்தால் கூட தேவனை அறிந்திருக்கலாம்.
இதோ இதற்கு தகந்தார்போல் பவுல் தரும் ஆதாரம்.
26 மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஓரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார். அப்போஸ்தலர் 17 :26
27 கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார். அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே. அப்போஸ்தலர் 17 :27
28 ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம். அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்போஸ்தலர் 17 :28
உங்கள் கேள்வியில் அற்தமே இல்லை சகோதரா
எல்லாம் ஏதாவது ஒரு பதில் கூறி நீங்கள் சமாலிக்கிறது போல உள்ளது.