Author Topic: என்ன செய்து கொண்டிருக்கிறார் ?  (Read 7533 times)

udaya

  • Guest
@:  எலியா மாதிரி நீங்களும் போயி வம்புக்கு இழுத்து கேட்டு பாருங்க....

எங்கிட்ட  காளை  மாடு இல்லீங்களே !

@:  இங்க என்ன நியா நானானு கர்த்தர் போட்டி நடத்திட்டு இருக்கார?

பின்னே ஏன் அவர் ,  தன்னையும் அந்நிய தேவர்களையும்  தேவையில்லாம  compare பண்ணிட்டே இருக்கிறார் ?

@:    போட்டி அவருக்கும் விக்கிரகத்துக்கும் இல்லபா...

ம்......உங்களுக்கு தெரியுது ! அவர்கிட்ட கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்க !

@:  வெரும் கல்ல அழிச்சி என்ன பலன். அதுக்குட சண்ட போடுறதுக்கு அதுக்கு உயிரும் இல்ல, எது சொன்னாலும் பேசவும் போறது இல்ல.

கரெக்ட்....அதை பொருட்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை . ஆனா....கர்த்தர்  தங்களுக்கு கொடுக்கிற முக்கியத்தை பார்த்து விக்கிரகங்களே ஆச்சரியமும் பெருமையும் பட்டிட்டிருக்கு ! ! !

@:  நீங்க சொல்றமாரியே விக்கிரகத்த அழிக்கிறாருனு வைங்க அதுநால என்ன பலன்?வணங்க கழுத்து உள்ளவங்க ஒன்னு இல்லனா இன்னொன்னு பொய்டேதா இருப்பாங்க.

விக்கிரத்தை விட்டுத்தள்ளுங்க ! வணங்க கழுத்து உள்ளவங்க  அல்லாகிட்ட போய்ட்டா என்ன பண்றது ? விக்கிரக டயலாக்கை modify செய்ய வேண்டி வரும் ?

@:    நீங்க சொல்லுறமாரி அந்த கல்லுக்கு எதும் சக்தி இருந்தாலும் பரவயில்ல ஒருவேல தேவன் அதுக்கு சரிக்கட்ட அத அழிக்கலாம்.

கல்லுக்கு சக்தி இல்லேன்னு முதலிலேயே சொல்லிட்டீங்க... மறுபடியும் அதற்கு எதற்கு extension கொடுக்கறீங்க..?  கல்லை பத்தியே  பேசி பேசி உங்களுக்கும் டவுட் வந்துவிடப் போகிறது ! ! !

@:    நீங்க சொல்லுரது எப்படி இருக்கு தெரியுமா!உங்களுக்கு பதில உங்க வீட்ல ஒரு கல்ல நிக்க வச்சி அது பேசுதோ இல்லையோ ஆனா உங்களுக்கு செய்யவேண்டிய எல்லாத்தையும் அதுக்கு செஞ்சி, நீங்க உங்க குடும்பத்துக்கு பன்ன நல்லதெல்லாதையும் அந்த கல்லுதா பன்னுச்சினு உங்க மகிமையெல்லாம் அதுக்கு கொடுத்தா இத நா எங்க வீட்டுகாரங்கட்ட இத கேட்க மாட்டேன் அந்த கல்ல தள்ளி விட்டு அதுக்குட சண்ட போடுவேன்னு சொல்லறமாரி இருக்கு..உங்க வீட்ல பேசி உணர வைக்காம அதுகூட சண்ட போட்டு பலன் என்ன?

கொதிச்சு போயிருக்கிறீங்க ....கொஞ்சம் கூலானதுக்கு அப்புறம் பேசலாம் !

@:    Reply # 14

அதற்குத்தான் சொல்றது ...கர்த்தர் இந்த மாதிரி அழிக்கிற காரியத்தையெல்லாம் செய்யவேண்டுமென்று ! ! !  கிதியோனுக்கு instruction கொடுக்கிற நேரத்தில நிமிஷமா இதை செஞ்சிருந்தா ஊர்க்காரங்க குதிப்பாங்களா ? ! ?

( மனுசங்கள அழிக்கற வேகத்தை விக்கிரங்களை அழிக்கிறதிலேயும காட்டணும் . மனுசங்கள கொல்லும்போது மட்டும் நேரடி action , ஆனா விக்கிரங்களை அழிக்கும்போது மனுசன அனுப்பி அழிக்க வச்சு ஊர்க்காரங்க கிட்ட மாட்டி விடறது அவ்வளவு சரியா படலீங்க ! )



arullpm

  • Guest
இது ஆவுற கத இல்ல!!!
உங்க எயிம் புரிஞ்சிக்க முயற்சி பன்றதா இருந்தா நீங்க reffer பன்னதுக்கு preaching பன்னிருப்பிங்க.

எப்படியோ உங்களுக்காக இன்னும் கேள்விதறேன்.
இதையும் வட்ச்சி குழப்பிகொங்க.


புலி பசித்தாலும் புல்லைதின்னுமா?

29 பின்னும் தேவன்: இதோ, பூமியின் மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது. ஆதியாகமம் 1 :29
30 பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார். அது அப்படியே ஆயிற்று. ஆதியாகமம் 1 :30

கயினோட மனைவி யார்?

வேற்றுகிரகவாசிகள உள்ளனர் என்று இப்போது வாதாடிக் கொண்டிருக்கிறாரகள் உங்கள் கருத்து?


நான் விக்கிரகத்தோட பின்னனில இருந்துதா வந்தேன் சகோ.

இந்து புராணங்கள் என்று சொல்லப்படும் சிலவைகள், முனிவர் சித்தர் பாடல்களில், கோயில்களில் ஓதப்படும் வேதங்களுக்கு அற்த்தம் தெரியுமா?

நமது புராணங்கள் அனைத்திற்க்கும் மூல மொழி சமஸ்கிருதம்.


Sample:

சஹஸ்ர நாமாவளி

1. ஓம் ஸ்ரீ பிரம்ம புத்திராய நமஹ: சிருஷ்டிகர்த்தாவின் புத்திரரே, போற்றுகிறோம்.

[தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனைத் தந்தருளி…உலகத்தில் அன்பு கூர்ந்தார் – யோவான் 3:16]

2. ஓம் ஸ்ரீ தரித்திர நாராயணாய நமஹ:
ஏழைக் குலத்தில் அவதரித்தவரே, போற்றுகிறோம்.

[அவர் ஐஸ்வரியம் உள்ளவராய் இருந்தும்…உங்கள் நிமித்தம் தரித்திரர் ஆனாரே – IIகொரிந்தியர் 8:9]

3. ஓம் ஸ்ரீ கன்னி சுத்தாய நமஹ: கன்னியின் கர்ப்பத்தில் பரிசுத்தமாய் பிறந்தவரே, போற்றுகிறோம்.

[இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதி ஆகி ஒரு குமாரனைப் பெறுவாள்… - மத்தேயு 1:23]

4. ஓம் ஸ்ரீ உமாத்யாய நமஹ: பரிசுத்த ஆவியினால் பிறந்தவரே, போற்றுகிறோம்.

[பரிசுத்த ஆவி உன்மேல் வரும்…உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் எனப்படும் – லூக்கா 1:35]

5. ஓம் ஸ்ரீ ஸிபிலிஷ்டாய நமஹ: தன்னுடைய மாமிசத்தில் வெளிப்பட்டவரே, போற்றுகிறோம்.

[தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்… - Iதீமோத்தேயு 3:16]

6. ஓம் ஸ்ரீ விதிரிஷ்டாய நமஹ: விருத்தசேதனம் செய்து கொண்டவரே, போற்றுகிறோம்.

[பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே…அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள் – லூக்கா 2:21]

7.ஓம் ஸ்ரீ அஜமுகாய நமஹ: செம்மறி ஆடு முகமானவரே, போற்றுகிறோம்.

[உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி – யோவான் 1:29]

8.ஓம் ஸ்ரீ விருக்ஷ சூல அருதாய நமஹ: சூலம் போன்ற மரத்தில் பலியானவரே, போற்றுகிறோம்.

[மனுஷ குமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக் கொடுக்கப்படுவார் – மத்தேயு 26:2]

9.ஓம் ஸ்ரீ மிருத்யும் ஜெயாய நமஹ: மரணத்தை வென்றவரே, போற்றுகிறோம்.

[அவர் தாம் சொன்னப்படியே உயிர்த்தெழுந்தார் – மத்தேயு 28:6]

10. ஓம் ஸ்ரீ மஹா தேவயாய நமஹ: தேவர்களுக்கெல்லாம் தேவனே, போற்றுகிறோம்.

[கர்த்தர் பெரியவர்…எல்லா தேவர்களுக்கும் மேலானவர் – சங்கீதம் 135:5]

தமேவம் வித்வனாம்ருத இஹ பவதி நன்ய பாண்டா அயனய வித்யதே: இந்த மனிதரை தியானித்து ஏற்றுக்கொண்டு உள்ளத்திலே விசுவாசித்து நாவினால் அர்ச்சித்தால் இந்த உலகத்திலிருந்து விடுதலை கிடைக்கும். இரட்சிப்பிற்கு வேறு மார்க்கம் இல்லை.


~~~~~~~~~~~~
சித்தர்பாடல்கள்:

122
விண்கடந்து நின்றேசோதி
மேல வாசலைத் திறந்து
கண்களிக்க உள்ளுளே கலந்துபுக்கிருந்தபின்
மண்கலந்த மாயமும் மயக்கமும்
மறந்துபோய்
எண்கலந்த ஈசனோடு இசைந்திருப்பது
உண்மையே

(சோதி - இயேசு கிறிஸ்து பரத்திற்கு ஏறிச்சென்று கண்கள்கான உள்ளே பிரவேசித்தபின் மாயையான இவ்வுலகை விட்டு ஈசானோடு(சமஸ்கிருத வார்த்தை கடவுள், இந்தி சமஸ்கிருதத்தை தழுவி இருப்பதால் இந்தி வேதாகமத்திலும் கடவுளுக்கு ஈஸ்வர் என்றுதான் வளங்குவர்) சேர்வது உண்மையே!!!


131
உங்கள் தேவன் எங்கள் தேவன்
என்றிரண்டு தேவரோ!
அங்கும் இங்குமாய் இரண்டு
தேவரும் இருப்பரோ!
அங்கும்இங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி
ஒன்றலோ
வங்கவாரம் சொன்னபேர்கள்
வாய்புழுத்து மால்வரே!


உண்மையில் நாம் நமது வேதத்தை சரியாக அறிந்திருந்தால் கூட தேவனை அறிந்திருக்கலாம்.

இதோ இதற்கு தகந்தார்போல் பவுல் தரும் ஆதாரம்.

26 மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஓரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார். அப்போஸ்தலர் 17 :26

27 கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார். அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே. அப்போஸ்தலர் 17 :27

28 ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம். அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்போஸ்தலர் 17 :28

உங்கள் கேள்வியில் அற்தமே இல்லை சகோதரா
எல்லாம் ஏதாவது ஒரு  பதில் கூறி நீங்கள் சமாலிக்கிறது போல உள்ளது.
« Last Edit: September 24, 2015, 09:29:46 PM by arullpm »

arullpm

  • Guest
அல்லாக்குனு புதுசா எதும் மாத்த தேவையில்லப்பா அல்லானா அரபிக்ல கடவுள்னுதா அற்த்தம்.
அரபிக் மொழிபெயர்பு பைபிள்'ல கூட கடவுள்க்கு அல்லானுதா இருக்கு.

மார்மன் பைபிள் மாதிரி குரானோட கதையும் பைபிள்'ல இருந்து சுட்டதுதான்
அவங்களுக்கு தகுந்தமாதிரி அங்க இங்க கொஞ்சம் அவங்க சொந்த கருத்த சொரிகிட்டாங்க அவ்லோதா..
« Last Edit: September 24, 2015, 08:55:09 PM by arullpm »

udaya

  • Guest
@:  புலி பசித்தாலும் புல்லைதின்னுமா?

பைபிள் எழுத்தாளர்கள்  , புலி என்ன எலியை கூட புல்லை தின்ன வைத்துவிடுவார்கள் .

@:  கயினோட மனைவி யார்?

அடுத்தவர் மனைவியை பற்றி தெரிந்துகொள்ள எனக்கு ஆர்வம்இல்லை .

@:  வேற்றுகிரகவாசிகள உள்ளனர் என்று இப்போது வாதாடிக் கொண்டிருக்கிறாரகள் உங்கள் கருத்து?

ரொம்ப லேட்டா வாதாடிக் கொண்டிருக்கிறாரகள் !

@:    நான் விக்கிரகத்தோட பின்னனில இருந்துதா வந்தேன் சகோ.

Welcome bro

@:  உங்கள் கேள்வியில் அற்தமே இல்லை

ஆமாம் , ஆனால் உங்கள் கேள்வியில் இருக்கிறது சகோ !

@:    சகோதராஎல்லாம் ஏதாவது ஒரு  பதில் கூறி நீங்கள் சமாலிக்கிறது போல உள்ளது.

பைபிளைப்பற்றி விவாதிக்கும்போது பகவத்கீதையை உள்ளே நுழைத்து சமாளிப்பதில் எனக்கு உடன்பாடில்லை !

@:  மார்மன் பைபிள் மாதிரி குரானோட கதையும் பைபிள்'ல இருந்து சுட்டதுதான்அவங்களுக்கு தகுந்தமாதிரி அங்க இங்க கொஞ்சம் அவங்க சொந்த கருத்த சொரிகிட்டாங்க அவ்லோதா..

பைபிளே சொந்த கருத்துக்கள் சொருகப்பட்ட கதை களஞ்சியம்தான் !

arullpm

  • Guest
ஓ!  சொந்த கருத்துனா எதுக்கு சகோ பைபிள இப்படி புறட்டிடு இருங்கிங்க!

ஒருவேல அந்த களையெல்லாம் பிடுங்க நினைக்கிருங்களோ என்னவோ!

எல்லாரும்தா சொந்த கருத்து சொல்லுராங்க அதெல்லாம் கிளராம பைபிள மட்டும் கிளருரீங்கனா எப்படி எடுத்துக்க?
பைபிள் பொய்னு நிருபிக்க நினைக்கிரீங்களா என்ன?

இந்த நூல்கள் எல்லாம் நம் முன்னோர்கள் தேவனை தெரிந்தருந்தார்கள் என்பதர்க்கு ஆதாரம் சகோதரா!

இயேசு வெள்ளைகார கடவுள்னு இப்பயும் சொல்லிடு இருகாங்க. ஆனா அவங்க புராணமே அவர்தா கடவுள்னு சொல்லுது.

இத எப்படி தவிர்க்கிரீங்க!!!

பரிசுத்த ஆவி - நம்பிக்க இல்ல
இயேசு - கர்த்தர் இல்ல
பைபிளோட அஸ்திபாரமே இவங்கதா, ஆனா இவங்கதா. இவங்களே உங்களுக்கு உண்மையில்ல. அப்போ பைபிள் என்னாத தேடுரீங்க!!!

எங்கடா குறையிருக்கும் னா???????



udaya

  • Guest
@:    ஓ!  சொந்த கருத்துனா எதுக்கு சகோ பைபிள இப்படி புறட்டிடு இருங்கிங்க!

சொந்தமான கருத்துக்களை உள்ளடக்கிய கதைகள் , கட்டுரைகள் , நாவல்கள் , ஆராய்ச்சி கட்டுரைகள் ...இப்படி பல நூல்களை ,மற்றவர்களப் போலவே நானும் புரட்டிக்கொண்டுதான் இருக்கிறேன் !  (ஒருவேளை நீங்களும் இந்த மாதிரி இருக்கக் கூடும் .)
இதில் நான் புரட்டினால் மட்டும் ஏன் சங்கடப்படுகிறீர்கள் ? நான்புத்தகங்களைப் புரட்டுவதில் உங்களுக்கு ஆடசேபனை இருந்தால் கூறுங்கள் !

@:  ஒருவேல அந்த களையெல்லாம் பிடுங்க நினைக்கிருங்களோ என்னவோ!

நான் நினைப்பது இருக்கட்டும் ! " களை பிடுங்கும் " எண்ணம் தங்களுக்கு எப்படி ஏற்பட்டது ! ? ! ?

@:  எல்லாரும்தா சொந்த கருத்து சொல்லுராங்க அதெல்லாம் கிளராம பைபிள மட்டும் கிளருரீங்கனா எப்படி எடுத்துக்க?

சொந்த கருத்தை கூறும் அந்த " எல்லோரும் "....

1. என்மீது தங்கள் கருத்துக்களை திணிப்பதில்லை.
2. தாங்கள் சொல்வதுதான் சரி என்று என் காதில் 120 decibel லில் கத்துவதில்லை .
3. நான் பாவி பாவி என்று என்னை குற்றப்படுத்துவதில்லை.
4. தாங்கள் சொல்லுவதை நம்பாவிட்டால் எரிநரகத்தில் தள்ளப்படுவேன் என்று சதா பயமுறுத்துவதில்லை.
5. பத்து சதம் வருமானத்தை கேட்பதில்லை .
6. என்னை அற்ப பதர் என்று உருவகப் படுத்துவதில்லை .
7. நான் சுயமாக சிந்திப்பது தவறு என்று கூறுவதில்லை .
8. தாங்கள் கூறும் அஞ்ஞான கருத்துக்களை சமாளிக்க விஞ்ஞானத்தை வளைப்பதோ அல்லது தவறு என்று கூறுவதோ இல்லை .
9. வன்முறையை தூண்டுவதில்லை.
.......போதுமென்று நினக்கிறேன் .

@:    பைபிள் பொய்னு நிருபிக்க நினைக்கிரீங்களா என்ன?

அந்த கஷ்டம் எனக்கில்லை !

@:    இந்த நூல்கள் எல்லாம் நம் முன்னோர்கள் தேவனை தெரிந்தருந்தார்கள் என்பதர்க்கு ஆதாரம் சகோதரா!

இருக்கட்டும் சகோ ! தெரிந்து என்ன செய்தார்கள் ?

@:    இயேசு வெள்ளைகார கடவுள்னு இப்பயும் சொல்லிடு இருகாங்க. ஆனா அவங்க புராணமே அவர்தா கடவுள்னு சொல்லுது.இத எப்படி தவிர்க்கிரீங்க!!!

அப்படியானால் அவங்க புராணத்தை நம்பலாம் என்று கூறுகிறீர்களா ?

@:  பரிசுத்த ஆவி - நம்பிக்க இல்ல
இயேசு - கர்த்தர் இல்ல
பைபிளோட அஸ்திபாரமே இவங்கதா,

மாற்றி சொல்லுகிறீர்கள் !
பிதா , குமாரன் , பரிசுத்த ஆவி இவர்களுக்கு அஸ்திபாரமே பைபிள்தான் !

@:    இவங்களே உங்களுக்கு உண்மையில்ல.

அப்படியல்ல சகோ ! இவர்களை பைபிள் சித்தரிக்கும் விதம்தான் ஏற்கும்படியாகவோ நம்பம்படியாகவோ இல்லை !
உதாரணம் : கொலைகார கடவுள் !

@:  அப்போ பைபிள் என்னாத தேடுரீங்க!!!எங்கடா குறையிருக்கும் னா?

இல்லை ...எங்கே நிறை இருக்குமென்று !

arullpm

  • Guest

1. என்மீது தங்கள் கருத்துக்களை திணிப்பதில்லை.
2. தாங்கள் சொல்வதுதான் சரி என்று என் காதில் 120 decibel லில் கத்துவதில்லை .
3. நான் பாவி பாவி என்று என்னை குற்றப்படுத்துவதில்லை.
4. தாங்கள் சொல்லுவதை நம்பாவிட்டால் எரிநரகத்தில் தள்ளப்படுவேன் என்று சதா பயமுறுத்துவதில்லை.
5. பத்து சதம் வருமானத்தை கேட்பதில்லை .
6. என்னை அற்ப பதர் என்று உருவகப் படுத்துவதில்லை .
7. நான் சுயமாக சிந்திப்பது தவறு என்று கூறுவதில்லை .
8. தாங்கள் கூறும் அஞ்ஞான கருத்துக்களை சமாளிக்க விஞ்ஞானத்தை வளைப்பதோ அல்லது தவறு என்று கூறுவதோ இல்லை .
9. வன்முறையை தூண்டுவதில்லை.
.......போதுமென்று நினக்கிறேன் .

ரொம்பவே போதும்.

நீங்கள் சுதந்தரவாதி தானே?
இதெல்லாம் உங்களுக்கு கடினமாக இருந்தால் உங்கள் விருப்பபடி விலகி இருக்கலாமே!!!
கடைசியாக நரகத்தின் மீதும் உங்களுக்கு நம்பிக்கையில்லை என்றால் நீங்கள் முழுவதும் உங்கள் சொந்த வாழ்கையை மட்டும் பார்த்திருக்கலாமே.
கடினமான உபதேசம் என்று கூறி பின்னும் அதிலே நிலைத்திருந்து உங்களை இன்னும் குழப்பிக்கொல்வானேன்!!!.

எனக்கு தெரிந்து வேதாகமம் இதை கூறியதில்லை.

ஒருவேலை தங்கள் சுய லாபத்திற்க்காக போதிக்கும் போதகர்கள் இதை உங்களுக்கு செய்திருந்தால் அவர்களுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்.


udaya

  • Guest
@:  நீங்கள் சுதந்தரவாதி தானே?இதெல்லாம் உங்களுக்கு கடினமாக இருந்தால் உங்கள் விருப்பபடி விலகி இருக்கலாமே!!!

முடிகிற காரியமா அது ? அடுத்த கமென்ட்டைப் பார்க்கவும்..

@:    கடினமான உபதேசம் என்று கூறி பின்னும் அதிலே நிலைத்திருந்து உங்களை இன்னும் குழப்பிக்கொல்வானேன்!!!.

நான் குழப்பிக்கொள்ளவில்லை ஜி....வேதாகமம்தான்  துரத்தித்துரத்தி குழப்புகிறது !

ஆதலால் எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார்.
ரோமர் 9 :18

@:  ஒருவேலை தங்கள் சுய லாபத்திற்க்காக போதிக்கும் போதகர்கள் இதை உங்களுக்கு செய்திருந்தால் ......

சுய லாபம் இரண்டாம் பட்சம் என்றாலும் ,
வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் " கணக்கு ஒப்புவிக்க வேண்டும் " என்ற பயமுறுத்தலுக்கு பயந்து ,  ஆத்துமா ஆதாயம் என்ற பெயரில் இதை செய்கிறார்கள் ! வேதாகமம் தான் இந்த முனைப்பிற்கு காரணம் !

மன்னிப்பு என்பது மீண்டும் நடைபெறாமல் இருந்தால்தான் அர்த்தம் பெறும். மேலும் நீங்கள் ஏன் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் ?
தயவுசெய்து மன்னிப்பு என்ற வார்த்தையையே விட்டுவிடுங்கள் !

susan paul

  • Guest
Adam and Eve daughter ......wife for Cain ...... Bible clearly says about Adam & Eve sons and daughters .....
Its not given Eve gave birth for cain....understand....


No more alience .....because God created only human beings .... If u r believing alience u r not believing Bible also.... 

arullpm

  • Guest
I know sister...

arullpm

  • Guest
My grand mother and grandfather has 30 members upto now including children and grandchildren.
In there 55 years of married life we 30 came.

After Abel and Cain, Seth born when Adam was 130 yrs old. So if a 70 years old parents can create half of there age ppl, then I no need to tell for 130 years old couples. Also Adam and Eve were not created as child. After all blessings for Adam and Eve is be fruitful and multiply..

I just asked as an example to mention that we can ask too many questions like this.

But by Holy Spirit nothing can be hidden. He reveals all, since he has been with God from the creation of the world upto now. So He knows all.

For bible tells,

For who knows a person’s thoughts except their own spirit within them? In the same way no one knows the thoughts of God except the Spirit of God.
1 Corinthians 2:11 NIV

So He has answers for every questions.

Peace be to u through Jesus Christ.

susan paul

  • Guest
Just for question I answered that's it
.... I knew brother u r growing in Christ .... Happy to see u in this site.... Go with the peace may the Lord will be with u....

udaya

  • Guest
Amen.

arullpm

  • Guest
Amen