Comments on reply # 43
@: ஒருவேலை சகரியா வாழ்நாள் முழுவதும் ஊமையாய் இருந்தால் தேவன் தண்டனை கொடுத்தார் என்று சொல்லலாம்.
You disappointed me bro.......
மரியாள் சாதாரண குடிமகள்....அவளுக்கு சந்தேகம் ஏற்படுவது ஒரு பெரிய குற்றமில்லை...
ஆனால் சகரியா தேவசந்நிதியில் ஊழியம் செய்கின்ற ஆசாரியன். மக்களுக்கும் கடவுளுக்கும் ஒரு பாலத்தைப் போல செயல்படுபவன்.அந்த ஆசாரியனே , தேவசந்நிதியில் சொல்லப்பட்ட பிரதான தூதனின் வார்த்தைகளை சந்தேகித்தான். அதனால்தான் அவனுக்கு தண்டனை !
..........இப்படி ஏதாகிலும் சொல்வீர்களென்று எதிர்பார்த்தேன்..... ஏமாற்றிவிட்டீர்கள்....
மேலும்...
தாவீதை கழற்றிவிட்டுவிட்டீர்கள்... நல்லதுதான்..
@: தயவு செய்து தண்டனைக்கும், அவருடைய சித்தின்படி நடக்கும் காரியங்களுக்கும் வித்தியாசம் புரிந்துக்கொள்ளுங்கள்
தயவு செய்து சொல்லுங்கள்... புரிந்துகொள்ளுகிறேன்.......உங்களது சொந்த வார்த்தைகளை உபயோகித்தால் நலம் !
@: இங்கே நாம் பாவத்திற்கான கடைசி கால தண்டனையை விவாதிக்கிறோம்.
OK.....
தடுத்து நிறுத்தாமல் , கடைசிகாலம் வரை பாவம் செய்ய அனுமதித்துவிட்டு கடைசியில் தண்டனை கொடுப்பது எந்த வகையான நீதி என்று தெரியவில்லை !
அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும் .......
என்று கூறுவது....... கடவுளின் "மூட்-அவுட்" மனநிலையை வெளிப்படுத்துவது போல தெரிகிறதே ! நிலைமை கையை விட்டு போனது போல தொனிக்கிறது ! அதனால் தான் கடைசியில் தண்டனையா ?
@: எப்படி மனிதனைப்போல ஒரே கண்களை உடையவர் என்கிறீர்களா? இல்லை அவர் சகலத்தையும் ஒரே நேரத்தில் காண்கிறார் என்று நான் சொன்னால் மறுப்பீர்களா?வசனமமும் இதையே சொல்கிறது. நீங்கள் சொல்வது மனிதனுக்கு சரிப்படும்.
கடவுளின் சாயலும் மனிதனின் சாயலும் ஒன்று வேதாகமம் கூறி , இருவருடைய தோற்றத்தையும்
சம்ப்படுத்துகிறது.
இதோடு விட்டிருந்தால் பரவாயில்லை......
*இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை.
*அறுத்தவர்களுடைய கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது.
*என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று.
*கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள்
*இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை, கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.
*அவர் நாசியிலிருந்து பட்சிக்கிற புகை எழும்பிற்று.
*அவர் வாயிலிருந்து அக்கினி புறப்பட்டது.
என்றெல்லாம் (கடவுளுக்கு கண்,காது,மூக்கு வைத்து) கூறி மனிதனளவுக்கு கடவுளை சாதரணப்படுத்துகிறது.
மனித கோணத்தில் கடவுளை உருவகப்படுத்தி சிந்திக்க ஊக்கப்படுத்துகிறது.
எனவே அதே ரீதியில் சிந்தனை பண்ணிட்டேன் சகோ !