1 வது கேள்விக்கு பதில் ஏதாகிலும் உள்ளதா ?
@: எல்லாவற்றிற்க்கும் சேர்த்து தனக்கு உகந்த ஒரே பலியாக தன் குமாரனை கொடுத்தார்.
பலி கொடுக்கும் உயிரினங்களின் list ல் மனிதன் இல்லை. எனவே இந்த பலி அங்கீகாரத்திற்கு தகுதியற்றது !
__________________________
பழைய ஏற்பாட்டை மற்றும் புதிய ஏற்பாட்டை modify செய்ய வேண்டிய சூழலில் பவுல் இருந்தது வெளிப்படையாக தெரிகிறது .
இயேசு கிறிஸ்துவுக்கு பிறகு , மக்கள் பல காரியங்களைப் பற்றி முணுமுணுக்க ஆரம்பித்து விட்டனர் . இதோ சீக்கிரமாய் வருகிறேன் என்ற இயேவின் வார்த்தைகளைக் குறித்து மக்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். சொன்னபடி இயேசு கிறிஸ்து திரும்பி வராததால் , இயேசு கிறிஸ்து மார்க்கத்தை தழுவினவர்கள் , பழைய, தங்கள் தங்கள் மார்க்கத்திற்கு செல்ல எத்தனித்தனர் .
இதை விரும்பாத பவுல் , பல மாறுதல்களை செய்ய ஆரம்பித்தார் ! அதற்காக பல சட்டங்களை வசதிக்கு ஏற்ப வளைத்து , தான் உருவாக்கிய மார்க்கத்தை கட்டி காப்பாற்ற முயற்சி செய்தார். கடிதங்கள் பல எழுதி "ஆடுகளை " காத்தார் .
சுயமாக தன்னை "அப்போஸ்தலன்" என்று பிரகடனப்படுத்தியும் கொண்டார் .
மார்கத்தை காப்பாற்ற எழுதிய கடிதங்களை , பைபிளில் சேர்த்துக்கொண்டது துரதிஷ்டவசமானது.
கையில் பழைய ஏற்பாட்டை வைத்துக்கொண்டு , மக்கள் மனநிலைக்கேற்ப புதிய ஏற்பாட்டை எழுதுவது சுலபம் . ( மத்தேயு இதில் எக்ஸ்பர்ட் )
கையில் பழைய, புதிய ஏற்பாட்டை வைத்துக்கொண்டு , மக்கள் மனநிலைக்கேற்ப கடிதங்களை எழுதுவது இன்னும் சுலபம்.
அல்லாமலும், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே.
எபிரேயர் 10 :4
பவுலின் நிலையில் யார் இருந்தாலும் மேற்கண்டவாறுதான் எழுதுவார்கள்.
சரித்திரத்தின் மீதும் தங்கள் கடைக்கண் பார்வையை சிறிதேனும் காட்டுங்கள் !
முடிந்தால் Mc Arthur's research bible ஐ வாங்கி படிக்கவும் .