General Category > Tamil Bible

பலி செலுத்துதல்

(1/3) > >>

udaya:
மிருகங்களின் சடலங்கள் பலிபீடத்தில் எரியும்போது எழும் smell , கர்த்தரைப் பொருத்தவரை " சுகந்த வாசனை"யாகும் !

ஆபேல் முதற்கொண்டு இயேசு கிறிஸ்துவின் காலம் வரை இது கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

இயேசு கிறிஸ்துவுக்காக கூட அவருடைய பெற்றோர் பலி செலுத்தினர். (லூக்கா 2:24 )

அவ்வளவு ஏன்......இயேசு கிறிஸ்து கூட பலிசெலுத்த சொன்னார் .( லூக்கா 5 :14 )

இதெல்லாம் நமக்கு தெரிந்த விஷயங்கள்தான் !
தெரியாத விஷயம் என்னவென்றால்.......

1.  பிதாவுக்கு பிடித்த இந்த செயல்பாட்டை நிறுத்தச் சொன்னது யார் ?
2.  இன்றைய நாட்களில் , மிருகங்கள் அல்லது பறவைகளை பலி கொடுத்தால் பாவமன்னிப்பு கிடைக்குமா ? கிடைக்காதா ?
( இயேசு கிறிஸ்து-சிலுவை மரணம்- ஜீவாதார பலி ஆகியவைகளை விடுத்து)

arullpm:
கிடைக்காது......

arullpm:
உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தின்மேல் எனக்குப்பிரியமில்லை.  நீங்கள் என் சந்நிதியில் வரும்போது, என் பிராகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார்?  இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வு நாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச்சகிக்கமாட்டேன்.
ஏசாயா 1:11-13

எல்லாவற்றிற்க்கும் சேர்த்து தனக்கு உகந்த ஒரே பலியாக தன் குமாரனை கொடுத்தார்.

arullpm:
சகோதரா மனமிருந்தால் எபிரேயர் 9, 10 முழுவதையும் படித்துவிட்டு இந்த கேள்வியை தொடரும்படி கேட்கிறேன். குறிப்பிட்ட வசனம் மட்டும் எடுத்துக்காட்ட எனக்கு மனதில்லை.

udaya:
1 வது கேள்விக்கு பதில் ஏதாகிலும் உள்ளதா ?

@:    எல்லாவற்றிற்க்கும் சேர்த்து தனக்கு உகந்த ஒரே பலியாக தன் குமாரனை கொடுத்தார்.

பலி கொடுக்கும் உயிரினங்களின் list ல் மனிதன் இல்லை. எனவே இந்த பலி அங்கீகாரத்திற்கு தகுதியற்றது !

__________________________

பழைய ஏற்பாட்டை மற்றும் புதிய ஏற்பாட்டை modify செய்ய வேண்டிய  சூழலில் பவுல் இருந்தது வெளிப்படையாக தெரிகிறது .

இயேசு கிறிஸ்துவுக்கு பிறகு , மக்கள் பல காரியங்களைப் பற்றி முணுமுணுக்க ஆரம்பித்து விட்டனர் . இதோ சீக்கிரமாய் வருகிறேன் என்ற இயேவின் வார்த்தைகளைக் குறித்து மக்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். சொன்னபடி இயேசு கிறிஸ்து திரும்பி வராததால் ,  இயேசு கிறிஸ்து மார்க்கத்தை தழுவினவர்கள் , பழைய, தங்கள் தங்கள் மார்க்கத்திற்கு செல்ல எத்தனித்தனர் .

இதை விரும்பாத பவுல் , பல மாறுதல்களை செய்ய ஆரம்பித்தார் ! அதற்காக பல சட்டங்களை வசதிக்கு ஏற்ப வளைத்து , தான் உருவாக்கிய மார்க்கத்தை  கட்டி காப்பாற்ற முயற்சி செய்தார். கடிதங்கள் பல எழுதி "ஆடுகளை " காத்தார் .

சுயமாக தன்னை "அப்போஸ்தலன்" என்று பிரகடனப்படுத்தியும் கொண்டார் .

மார்கத்தை காப்பாற்ற எழுதிய கடிதங்களை , பைபிளில் சேர்த்துக்கொண்டது    துரதிஷ்டவசமானது.

கையில் பழைய ஏற்பாட்டை வைத்துக்கொண்டு , மக்கள் மனநிலைக்கேற்ப புதிய ஏற்பாட்டை எழுதுவது சுலபம் . ( மத்தேயு இதில் எக்ஸ்பர்ட் )

கையில் பழைய, புதிய ஏற்பாட்டை வைத்துக்கொண்டு , மக்கள் மனநிலைக்கேற்ப கடிதங்களை எழுதுவது இன்னும்  சுலபம்.



அல்லாமலும், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே.
எபிரேயர் 10 :4

பவுலின் நிலையில் யார் இருந்தாலும் மேற்கண்டவாறுதான் எழுதுவார்கள்.

சரித்திரத்தின் மீதும் தங்கள் கடைக்கண் பார்வையை சிறிதேனும் காட்டுங்கள் !
முடிந்தால் Mc Arthur's research bible ஐ வாங்கி படிக்கவும் .


Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version