OK fine . I try to resolve myself , the alleged "contradiction" , posed by me ! Please say your opinion .
பரிசுத்த ஆவியானவர் , இயேசு கிறிஸ்து பரமேறிச் செல்லும் வரை , பரமண்டலத்திலிருந்து இவ்வுலகத்திற்கு அவ்வப்போது இறங்குபவராக இருந்தார் .
- பிதாவின் கட்டளையை ஏற்பவராகவும் ( ஏசாயா 63:18 ) ,
- இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் தோன்றுவதற்கு காரணராயும் ( மத்தேயு 1:18 )
- தீர்க்கதரிசன ஆவியாகவும் ( லூக்கா 1:67 )
- வாயின் வார்த்தைகளாகவும் ( லூக்கா 12:12 , மாற்கு 13:11 ),
- இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெறும்பொழுது பிதாவின் அங்கீகார தூதராகவும் (லூக்கா 3:22 ) செயல்பட்டு வந்தார் .
ஆனால் இவைகள் எல்லாம் , பிதாவின் சித்தத்திற்கு ஏற்ப அவ்வப்போது நிகழ்ந்தவைகள் !
ஆனால்....
இயேசு கிறிஸ்து , பரமேறுவதற்கு முன்னதாக ,
தான் விட்டுச்செல்லும் இடத்தை
* நிரந்தரமாக நிரப்ப * அதாவது என்றென்றைக்கும் நம்முடன் இருக்கும்படியாக ( யோவான் 14:16 ) பரிசுத்த ஆவியை நிலைபெறச் செய்ய வேண்டும் , என்று விரும்பியிருக்கக்கூடும் .
மேலும் , அவருடைய போதனைகள தொடர்ந்து செய்யவும் ( யோவான் 14:26 ) , அவர் இந்த உலகத்தில் வந்து போனதிற்கு சாட்சியாக இருக்கவும் ( யோவான் 15:26 ) எண்ணங்கொண்டு ,
பரிசுத்த ஆவியானவர் நிரந்தரமாக இங்கே தங்கியிருக்க வேண்டியதன் அவசியத்தை உணந்தவராக பேசிய வசனங்கள்
யோவான் 14:16 , 14:26 , 15:26 , 16:7 பதிவு செய்யப்பட்டுள்ளது.
யோவான் 16: 7 , வசனத்தை இயேசு கிறிஸ்து பேசும்போது , பரிசுத்த ஆவியானவர் நிரந்தரமாக இங்கே தங்கியிருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் உணர்த்துவதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
எனவே ...
இயேசு கிறிஸ்து பரமேறி செல்லும்வரை , பரிசுத்த ஆவியானவர் , ஒரு விருந்தாளி !
பரமேறி சென்றபின் , பரிசுத்த ஆவியானவர் நமக்கு ஒரு உடனாளி !
வசனங்கள் இதைத்தான் பிரதிபலிக்கின்றன !
ஆக முரண்பாடு எதுவுமில்லை. Q E D.
( உங்கள் கருத்துக்கள் எதுவுமிருப்பின் கூறும்படி கேட்டுக்கொள்கிறேன்... நன்றி )