தேவன் வானத்தையும் பூமியையும் கொல்லனையும் ஆயுதத்தையும் ஒளியையும் இருளையும் சமாதானத்தையும் தீங்கையும் மனுஷரையும் மற்றும் எல்லாவற்றையும் படைத்தார். கடைசிகாலங்களில் உலகம் எப்படி அழியப்போகிறது என்பதையும் அறிவித்திருக்கிறார். ஆதாம் ஊசா பார்வோன் யூதாஸ் போன்றவர்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கனவீனமான பாத்திரங்கள். அவர்களுக்கு சுயசித்தம் கிடையாது. மற்ற அனைவரும் சுயசித்தம் உடையவர்கள். நாம் தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரமா இல்லையா என்பதும் நமக்குத் தெரியாது. தேவனுடைய சித்தம் அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரங்கள்மீது முழுமையாக ஆளுகைசெய்யும். மற்றவர்கள் தேவனுடைய சித்தமாகிய பரலோகத்தற்குரிய நீதியும் பரிசுத்தமும் பூமிக்குரிய அன்பு விசுவாசம் நீதி இரக்கம் போன்றவற்றை உடையவர்களாக மாறவேண்டும். ஆதாம் தேவனுடைய கட்டளையை மீறுவதற்காகவே படைக்கப்பட்ட தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கனவீனமான பாத்திரம்.தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றியபடியால் ஆதாமுக்கு மோட்சத்தில் இடமுன்டு.