27 தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் "தேவசாயலாகவே சிருஷ்டித்தார்". ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
ஆதியாகமம் 1 :27
5 நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் "தேவன் அறிவார்" என்றது.
ஆதியாகமம் 3 :5
19 தேவனாகிய கர்த்தர் வெளியின் சகல வித மிருகங்களையும், ஆகாயத்தின் சகல விதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேயரிடுவான் என்று ""பார்க்கும்படி"" அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்.
ஆதியாகமம் 2 :19
மனிதனை தேவர்களின் சாயலாகவே படைத்த தேவன் அவனை தேவர்களைப்போல படைக்கவில்லை!
அவர் ஆதாமின் செயல்களை பார்க்கவே அவ்வாறு செய்தார்..
ஆதாம் கடவுளுக்கு கிழ்படிந்து இருந்தால், வேதம் மாறி அமைந்து இருக்கும்!!
ஆண்டவர் தனது மக்கள் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும் என்பதுக்காகவே இவ்வாறு செய்திருக்கலாம்
மனிதரை புனிதர்கள் ஆக்கவே அவ்வாறு செய்தார்.... புனிதர்களை தேர்ந்து கொள்ளவே இவ்வாறு செய்து இருக்களாம்!! ஆண்டவரின் அறிவு அளவற்றது
லூசிஃபர் போன்று இந்நொரு தூதனை தள்ளிவிட கடவுளுக்கு விருப்பம் இல்லை போல!
அனைத்தும் அவரால் நிகழ்கிறது!! அனைத்தையும் அவர் அறிவார்!!