பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்று இயேசு கிறிஸ்து சொன்னார் என்பது உண்மைதான்.
ஆனால் , அந்த அதிகாரத்தை திமிர்வாதக்காரன் மேல் காட்டியது போலவே நம் அனைவர் மீதும் ஏன் காட்டவில்லை ? இதில் என்ன சிக்கல் இருக்கிறது என்று தெரியவில்லை.
பாவங்களை மன்னிக்க சிலுவைப்பாடு மரணம் என்ற கடின வழியை பின்பற்றியது ஏன்?
இரத்தம் சிந்தாமல் மன்னிப்பில்லை என்ற
விதியை உருவாக்கியது ஏன் ?
சிலுவையில், பிதாவே இவர்களுக்கு மன்னியும் என்று பிதாவின் மன்னிப்பை ஏன் கோரினார் ?
"பரமண்டல ஜெபத்தில்...் பிதாவிடம் மன்னிப்பு கேட்க சொன்னாரே !?
இதெல்லாம் ஒரு புறமிருக்க , எரோமியா 31:31-34 வரையில் காணப்படும் பாவங்களை மன்னிக்கும்" புது உடன்படிக்கை " திட்டம் என்னவானது ? இத்திட்டம் ஏற்கனவே அமலில் இருந்ததுதானே ! ?
பாவமன்னிப்பு பெற பல வழிகள் உள்ளதுபோல் தெரிகிறது !