Mastrubation தவறு என்றே வேதம் நமக்கு போதிக்கிறது.
27 விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
மத்தேயு 5:27
28 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிறஎவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.
மத்தேயு 5:28
29 உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு, உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.
மத்தேயு 5:29
30 உன் வலதுகை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத்தறித்து எறிந்துபோடு, உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.
மத்தேயு 5:30
இங்கே இருதயத்தில் நாம் செய்யும் விபச்சாரம் பற்றி இயேசு பேசுவதை காண்கிறோம். ஒரு ஸ்த்ரீயை இச்சையோடு பார்ப்பதே விபச்சாரம் என்று இயேசு சொல்லுகிறார். ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்காமல், இச்சையாக நினைக்காமல் mastrubation பண்ண முடியாது. எனவே அது விபச்சாரம் என்றே ஆகிறது.
இந்த இடத்தில் இன்னொரு முக்கியமான வார்த்தையை கவனிக்க வேண்டும்.( உன் கண் உனக்கு இடறலுண்டாக்கினால்) என்பது இச்சையோடு பார்ப்பதை குறிக்கிறது. அடுத்த வார்த்தை ( உன் கை உனக்கு இடறலுண்டாக்கினால்) எதை பற்றி சொல்கிறது. தயவு செய்து சிந்திக்கவும்.