யார் கடவுள் கிருஸ்துவ மதத்தில்?
ஏன் இந்த சந்தேகம்......?
பரிசுத்த வேதாகமத்தின் கூற்றுப்படி , தேவனாகிய கர்த்தர் " தான் " ஒருவர் மட்டுமே கடவுள் என்று கூறுகிறார்.
வானங்களைச் சிருஷ்டித்துப் பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.
ஏசாயா 45:18
நானே கர்த்தர், வேறொருவர் இல்லை, என்னைத்தவிரத் தேவன் இல்லை.
ஏசாயா 45:5
என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன், நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.
ஏசாயா 45:6
மட்டுமல்ல......அவருக்கு இணையானவர் யாருமில்லை என்று வேதாகமம் கூறுகிறது.(no trinity !!!!)
முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள், நானே தேவன், வேறொருவரும் இல்லை, நானே தேவன், எனக்குச் சமானமில்லை.
ஏசாயா 46:9
அவருக்கு பிறகும் யாரும் இருக்கப்போவதில்லை என்றம் கூறுகிறது.
(புதிய ஏற்பாட்டில்... ? )
நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு, நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார், எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை.
ஏசாயா 43:10
பாவங்களை மன்னிப்பவர்.......
நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன், உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்.
ஏசாயா 43:25
அவரைத்தவிர வேறு ரட்சகர் இல்லை....
நான், நானே கர்த்தர், என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.
ஏசாயா 43:11
(நான் ..நானே.. என்ற அழுத்தத்தை கவனிக்கவும் )
அவர் தன் மகிமையை யாருக்கும் கொடுக்கவில்லை ! !
என்னிமித்தம், என்னிமித்தமே, அப்படிச் செய்வேன், என் நாமத்தின் பரிசுத்தம் எப்படிக்கு குலைக்கப்படலாம்? என் மகிமையை நான் வேறொருவருக்குங்கொடேன்.
ஏசாயா 48
ஒருவராய் எல்லாவற்றையும் படைத்தவர்....(மூவரல்ல..!!)
உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர், நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்.
ஏசாயா 44
யார் கடவுள் என்பதை வேதாகமம் இவ்வாறாகவும் இதைவிட அழுத்தமாகவும் கூறுகிறது.