எனக்கு தெரிந்தவரை வைன் குடிப்பதை தப்பு என்று வேதம் சொல்லவில்லை.
இயேசு போஜன பானம் பண்ணுகிறவராக இருந்தார் என்று வாசிக்கிறோம். புசிக்கிறவராகவும், குடிக்கிறவராகவும் இருந்தார் என்று சொல்வது கண்டிப்பாக தண்ணீர் குடிப்பதை பற்றி சொல்லவில்லை. ஏனெனில் தண்ணீர் குடிப்பது பொதுவாக எல்லாரும் செய்வதுதான். அதை தனியாக குறிப்பிட்டு சொல்லவேண்டிய அவசியம் இல்லை. எனவே ஏசுவும் திராட்சைரசம் எனப்படும் wine குடித்திருப்பார் என்றே கருதுகிறேன்.(திராட்சை பழ juiceஐ wine என்று சொல்லமாட்டார்கள். எனது சபையில் இருக்கும் பெரியவர்கள் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்
)
6 மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவனுக்கு திராட்சைரசத்தையும் கொடுங்கள்.
நீதிமொழிகள் 31:6
7 அவன் குடித்துத் தன் குறைவை மறந்து, தன் வருத்தத்தை அப்புறம் நினையாதிருக்கட்டும்.
நீதிமொழிகள் 31:7
மேலும் பவுல் தீமோத்தேயுவுக்கு அறிவுரைகள் சொல்லும்போது இப்படி சொல்லுகிறார்,
23 நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம் குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சைரசமும் கூட்டிக்கொள்.
1 தீமோத்தேயு 5:23
எனவே திராட்சைரசம் குடிப்பது பிரச்சனை இல்லை. ஆனால் குடித்து வெறித்திருக்க கூடாதென்று வேதம் போதிக்கிறது.
எளிமையாக சொன்னால் @udaya brother மேலே சொன்னது போல்,
தப்பில்லை... ஆனால் புத்தி தவறாமல் நிலையாக இருக்கணும்.