@reply #6
:Ippothu dinosargalai pathi bible la pota enna podalanna enna ??
"வேத புத்தகம் தான் தேவனுடைய வார்த்தை. வேத புத்தகத்தை மிஞ்சிய அறிவு எதுவும் இல்லை" என்பதை கேட்டு வளர்ந்தவன் நான். எனவே நான் கற்றுக்கொள்ளும் எந்தவொரு விஷயத்தையும் வேதத்தில் ஒப்பிட்டு பார்ப்பது வழக்கம். அப்படி பார்க்கும் போது சில விஷயங்கள் மிகவும் நெருடலாக உள்ளது.
: Neraya per bible la visuvasikarathe illa
இது போன்ற நெருடலான, சந்தேகத்துகிடமான விஷயங்களை கேட்கும் போது அதற்கு சரியான பதில் தர முயலாமல் , உங்களை போன்ற பெரியவர்கள் கிண்டலாய் தட்டிகழிக்கும் போது , என்னை போன்ற நிறைய பேர் 'பைபிள் என்பது அடிப்படைவாதிகளுக்கான ஒரு சமய புத்தகம்' என்று அவிசுவாசமடைகிறார்கள்.
@ bible atharkku mukkiyathuvam kodukkavillai endru vaithu kolvom
டைனோசர்களின் எலும்பு மாதிரிகள் பரவலாக உலகம் எங்கும் கிடைக்கிறது. பொதுவாக டைனோசர்களை CARNIVORSE(மாமிச உண்ணிகள்) , HERBIVORSE (தாவர உண்ணிகள்) என்று பிரிக்கின்றனர்.
இரண்டுமே அளவில் பெரியவை. ஒருவேளை மனிதன் வாழ்ந்த அதே காலத்தில் இவை வாழ்ந்திருந்தால் கண்டிப்பாக மனிதன் இவற்றால் கொல்லப்பட்டிருப்பான். அவன் விளை நிலங்கள் இவற்றால் மேயபட்டிருக்கும். அந்த கால ஈட்டி, வாள், அம்புகளை கொண்டு மனிதன் இவற்றை கொன்றிருக்க வாய்ப்பு மிக குறைவு. எனவே மனித குலத்திற்கு மிக பெரிய அச்சுறுத்தலாக இது இருந்திருக்கும்.
அப்படி இருக்கும் போது வேதம் இதற்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்திருக்கும்.??
கொஞ்சம் யோசித்து பதில் சொல்லவும்.
மேலே @udaya கூறிய GAP THEORY கூட ஏற்றுக்கொள்வதை போல இருந்தது. உங்கள் கருத்து சுத்த அடிப்படைவாதமாக உள்ளது.