நன்றி பிரதர் உதய், விக்கிஆல்பா.
இந்த மன்றம் கடவுளை மதிப்பதை, உயிருக்கு மேலாக நேசிப்பதை கற்றுத் தர, பழகி தர வேண்டும்.
மனிதன் எந்நாளும் கடவுளை அவமதிக்க, அசிங்கப்படுததவே குறியாக இருக்கிறான்.
ஏதேனில் நடந்தது வெறும் ஞானப்பழம் பிரச்சினை இல்லை. நீங்க விளங்கி கொண்டது அவ்வளவு தானா.
உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை உங்க பிள்ளைக்கு பிள்ளையிள் பிள்ளைக்கு காலம் காலமாக குறையே வந்து விடாமல் பூரணமாக வாழ நீங்க பட்ட பாட்டை துளி கூட கவனத்தில் கொள்ளாமல் சாகவே சாகாம வாழ சாப்பிடுன்னு எவனோ சொன்னதை கேட்டு நம்பி சாப்பிடுவது முதலில் கடவுளை பற்றி இரண்டு குற்றச்சாட்டுகளை ஆமோதிக்கிறதை காட்டுது.
1. கடவுள் ஆதாமுக்கு மிக நன்மையான ஒன்னை மறைத்தவர் அதை ஆதாம் யாரோ ஒருவர் மூலம் தெரிந்து கொண்டான்
2.ஆதாம் நேரடியாக கடவுள் சட்டத்தை மீறியதால் இனியும் ஆதாம் தொடங்கி யாரையும் ஆள்வதற்கு கடவுளுக்கு அதிகாரம் கிடையாது
பிள்ளை இப்படி நிலயை உங்களுக்கு உருவாக்கினால் உங்க அடுத்த மூவ் என்ன? இது வெறும் ஞானப்பழம் மேட்டரா
இயேசு ஆரம்பத்தில் பூமிக்கு வரதேவை உருவாக வில்லை.
தீர்க்க தரிசியும் அனுப்ப வேண்டிய தேவை இல்லை
இராஜாக்கள், தலைமைக் குரு, ஆசாரியத்துவம் தேவை கிடையாது.
எப்ப நன்றி கெட்டு அவமதிக்க கூடாத அளவில்லா கருணை, இரக்கம், அன்பு கனிவு உள்ள உண்மை தகப்பனை எவனோ பித்தலாட்டக்காரன் பேச்சைக்கேட்டு அந்த இரண்டு பதிலளிக்க வேண்டிய கேவலமான கட்டாயத்தை உருவ்க்கினாங்களோ அதுக்கு தான் இயேசு, தீர்க்கதரிசி, ஆசாரியத்துவம், அரசுரிமை எக்சட்ரா எக்சட்ரா.
ஆதாம் உடனே அந்த பழத்தை சாப்பிட வில்லை
அவன் தனிமையில் வாழ்ந்திருந்தான்
ஏவாள் படைக்கப்பட்டான். இரண்டும் தம்பதியாக வாழ ஆரம்பித்தது. ஒரே உடலாக மத்தேயு 19:4,5யும் வாசியுங்கள்.
பழம் சாப்பிடாம வாழ்ந்த காலம் இருந்து இருக்கு. அப்ப கீழ்படிந்து வாழ்ந்த நாள் இருந்திருக்கு. கடவுள் பரிசுத்தமானவர். எந்த கறையும், களங்கமும் இல்லாதவர்.
ஆதாமுக்கு மறைத்து எந்த செயலையும் நினைத்தது கூட கிடையாது.
மனித குடும்பத்தை தான் படைத்து கொடுத்த A to Z தந்து அன்போடு, பாசத்தோடு, அக்கறையோடு தான் மட்டுமே ஆள முடியும் என்பதை நிருபிக்கும் போது யார் சட்டம் உயர்நதது, அவசியமானதுன்னு விளங்கும்.
திட்டம் இயேசுவை வைத்து தயார் ஆதியாகமம் 3:15 ஏசாயா 9:6,7 தானியேல் 2:44 மத்தேயு 6:9,10
கடவுளை வேண்டும் என்றே எதிர்த்து கலகம் செய்து எல்லாவித வாழ்க்கை முறை ஆட்சி முறை பிரயோகித்து பாத்துட்டான் மனிதன். விளைவை இந்த மன்றத்தில் நான் சொல்ல வேண்டாம்
மனிதர்கள் உருவாக்கும் சட்டங்கள் கடவுளை அசிங்கபடுத்தாம, அவமதிக்காம, பரிசுத்தத்தை கெடுக்காத வரை வரம்புகளுக்கு உட்பட்டு அடங்க கடவுளே பைபிளில் வேத பிள்ளைகளுக்கு கட்டளை, உத்திரவு தந்து இருக்கிறார். ரோமர் 13:1-7 லூக்கா 20:25 அப்போஸ்தலர் 4:19
கடவுளுடைய வழிகாட்டுதலை மட்டுமே ஏற்க வேண்டும். அது மட்டுமே ஏற்புடையது.
நமக்கு எது இனிமை பாத்து வாழ்வது மனம் போன போக்கு
கடவுளுக்கு எது உகந்தது பாத்து வாழ்வது வாழ்வு. அதுக்கு நிறைய கடவுளை பற்றிய அறிவு, விபரம், கடவுளுடைய சக்தி வேண்டும். அதை கடவுளிடம் அன்றாடம் கேட்டு பெற வேண்டும். கேக்குறீங்களா. அவர் இல்லை என்று சொல்ல மாட்டார்.
பிரதர் விக்கி ஆல்பா உங்களுக்கு பைபிளில் நடந்த எத்தனை திருமணங்கள் பதிவு தெரியும்.
ஆதாம் ஏவாள் மணவாழ்க்கை
ஈசாக் ரெபேக்கா மணவாழ்க்கை
இயேசு போயிருந்த திருமண விழா
இந்த பதிவுகள் ஏதோ வெறும் உளறல் இல்லை
நியாயப்பிரமாணத்துக்குள் நாம இப்ப கிடையாது
மணப்பெண் பைபிள் தெரிந்திருக்க வேண்டும் (அவிசுவாசியாக இருக்க கூடாது)
கண்ணிப்பெண்ணாக இருக்க வேண்டும் (இல்லன்னா விபச்சாரமாகி விடும்)
உபாகமம் 22:13-30
1தெசலோனிக்கேயர் 4:3,5
எபிரேயர் 13:1-6
தன் வருங்கால மனைவியை சான்றாகக் தேர்ந்தெடுக்க நீதிமொழிகள் 31:10-31 ஒரு சகோதரருக்கு எப்படி உதவும்.
இளமை மலரும் பருவத்தை கடப்பதற்கு முன்பு திருமணம் செய்யாதிருப்பது ஏன் நல்லது 1 கொரிந்தியர் 7:36, 13:31 மத்தேயு 19:4,5
தனக்கு கணவராக வரப்போகிறவரிடம் எப்படிப்பட்ட குணங்கள் இருக்க வேண்டும்
என்பதை தெரிந்து கொள்ள சகோதரிக்கு உதவ இந்த வசனங்கள் எப்படி உதவுகிறது சங்கீதம் 119:97 1 தீமோத்தேயு 3:1-7