@udaya brother
ஒருவேளை இப்படி இருக்கலாம் அல்லவா? கடவுள் மிகவும் அன்பு நிறைந்தவர்.
சாத்தான் அவரை எதிர்த்தாலும், அவர் அவனை நேசித்தார். சாத்தான் கடவுளை எதிர்த்து, அவரது நடைமுறைகள் தவறு என்ற பொழுது கடவுள் அவனை அழித்திருக்க முடியும். ஆனால் கடவுள் அப்படி செய்யவில்லை.
இப்படி வைத்துக்கொள்ளலாம்.
ஒரு சிறந்த கணித ஆசிரியர் ஒரு கடினமான பாடத்தை நடத்திக்கொண்டு இருந்தார். அப்போது ஒரு சேட்டைக்கார மாணவன் எழுந்து அவர் சொல்லிக்கொடுப்பது தவறு என்று அவரை குற்றம் சாட்டி, கூச்சல் போட்டான். அவனுடன் சில நண்பர்களும் சேர்ந்து கொண்டனர். இப்பொழுது அவர் என்ன செய்யலாம்? அவர் அந்த மாணவனை வகுப்பறையை விட்டு வெளியேற்றலாம், அவருக்கு அந்த அதிகாரம் உண்டு. ஆனால் அப்படி செய்தால் வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் என்ன நினைப்பார்கள்? ஒருவேளை அந்த பையன் சொன்னது சரியாயிருக்குமோ என்று நினைப்பார்கள்.
புத்திசாலியான அந்த ஆசிரியர் என்ன செய்வார்? அந்த மாணவனின் கையில் சாக்பீஸை கொடுத்து, அவனை முன்னால் வரசொல்லி அவனை அந்த பாடத்தை நடத்த சொல்லுவார். அப்பொழுதுதான் அந்த பையன் சொன்னது தவறு என்று மற்றவர்கள் முன்னிலையில் நிரூபிக்க முடியும். அந்த பையனுக்கும் அதை புரியவைக்க முடியும்.
கிட்டத்தட்ட அந்த கணத்தில் ஒரு ஆசிரியரின் அதிகாரத்தை பையனுக்கு கொடுக்கிறார்.
அதைப்போலவே சாத்தான் கடவுளுக்கு எதிராக புரட்சி செய்த போதும் நடந்தது.
அவர் அவனுக்கு அதிகாரம் கொடுத்து பூமியில் அவனை அனுமதித்தார்.
மனிதர்கள் சுகபோகமாக, சுதந்திரமாக, வலிமையானவன் பிழைக்கலாம் என்ற வாழ்வின் கோட்பாட்டை(சாத்தானின் கோட்பாடு) தேர்வு செய்கிறார்களா?
அல்லது கடவுளின் வரம்புக்குள் அடங்கி, அவரை முழுவதும் நம்பி , ஒருவருக்கொருவர் உதவிசெய்து, சார்ந்து வாழும் கோட்பாட்டை(கடவுளின் விருப்பம்) தேர்வு செய்கின்றனரா? என்று அவர் மற்ற தூதர்கள்(மாணவர்கள்) முன்பாக காட்ட விரும்புகிறார். எனவே அவர் சாத்தானை அனுமதித்திருக்கிறார்.
இப்படியும் வைத்துக்கொள்ளலாமே brother.