சரியா என்று விசுவாசிகளின் குரலாகத்தான் அதை பதிவு செய்தேன் . கடந்த காலங்களில் நானும் இதுபோன்ற பல கேள்விகளை கேட்டு இருக்கிறேன் அப்போதெல்லாம் விசுவாசிகள் இந்த மாதிரியான ஒரு பதில் கருத்தை கூறுவார்கள் அதைத்தான் உங்களுக்கு நினைவு படுத்தினேன். மற்றப்படி வேறு ஒன்றும் இல்லை.
அப்படியே இருந்தாலும் கூட நீங்கள் அந்தக் கேள்வியை தேவனாகிய கர்த்தரிடத்தில் கேட்கவில்லையே . கருத்துக்களத்தில் தானே கேட்டீர்கள்! அதில் எந்தத் தவறும் கிடையாது.
மன்னிப்பு கேட்கிற அளவிற்கு ரொம்ப சீரியஸா போயிட்டீங்களே சகோ.
Take it easy bro.....
அது இருக்கட்டும்...
அடிப்படையில் நான் கேட்க வந்த கேள்வி என்னவென்றால் , சாத்தான் எப்பொழுது சர்ப்பமானது அல்லது சர்ப்பமாக முயற்சித்தது என்பதுதான்.
எந்த வேதப்பகுதி அந்த மாதிரியான ஒரு கருத்தை தோற்றுவிக்கிறது என்று கூற முடியுமா ?