General Category > Tamil Bible

அறியாத ஜனங்கள்

(1/2) > >>

Vickyalpha:
கிறிஸ்தவ கடவுளை or ஏசுவை பற்றி, பற்றி அறியாத ஜனங்களின் நிலைமை என்ன? நியாயத்தீர்ப்பு அவர்களுக்கு எப்படி நடக்கும்?

udaya:
ஏற்கனவே இக்கருத்துக் களத்தில் விவாதிக்கப்பட்ட ஒன்றுதான் இது.

இயேசுவை அறியாத ஜனங்கள் தண்டிக்கப்படுவார்களென்றால் , கடவுள் நீதியற்றவர் என்றாகிவிடும்.
மாறாக , அவர்கள் தண்டிக்கபட மாட்டார்கள் என்றால், இயேசுவை அறிவிக்காமல் விட்டுவிடலாம் அல்லவா ? யாருக்கும் தண்டனை இல்லாமல் போய்விடும். வீணாக , ஒருவருக்கு சுவிஷேசத்தை அறிவித்து அவரை தண்டனைக்கு உட்படுத்துவானேன் !

எப்படிப் பார்த்தாலும், சுவிஷேசத்திற்கு check வைக்கும் கேள்விதான் இது.

Chandruparkulan:
மத்தேயு :24;14 , மாற்கு :16;15 ,லூக்கா :24;47  போன்றவற்றில்  முழு உலகத்திற்கும் சுவிசேஷம் அறிவித்த பிறகு தான் கிறிஸ்துவின்  இரண்டாம் வருகை வரும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

Vickyalpha:
@Reply 2

இதுவரை சுவிசேஷம் கேட்காமல் இறந்துபோன கோடிக்கணக்கான மக்களின் நிலை என்ன?

udaya:
உலகம் முழுவதும் சுவிஷேசம் எப்பொழுது அறிவிக்கப்படும் ? சுவிஷேசம் அறிவிக்கப்படும் வேகத்தைக் காட்டிலும் மனித பிறப்பின் வேகம் பல ஆயிரம் மடங்கு அதிகம் என்ற உண்மையை வைத்து பார்க்கும்போது இது சாத்தியமா ?
மனித வழிமுறைகளில் சாத்தியமில்லை. வானத்திலிருந்து அவரவர் மொழியில் சுவிஷசம் அறிவிக்கப்பட்டாலொழிய இது சாத்தியமில்லை.
அப்படியே அறிவிக்கப்பட்டாலும் , குழந்தைகள் , மனநலம் குன்றியோர்களுக்கு எப்படி சென்றடையும் ?
அப்படி அறிவிக்கப்பட்டால் , கூடவே எழும் கேள்வி......

இத்தனை பாவிகள் உருவாகும் வரை கடவுள் ஏன் காத்திருந்தார் ?

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version