@ udaya brother
உழைப்பு என்பது இருவகைப்படும். ஒன்று உடல் உழைப்பு, இன்னொன்று மூளை உழைப்பு. இரண்டுமே உழைப்புதான்.
ஆனால் நாம் பொதுவாக உடல் உழைப்பை மட்டுமே 'உழைப்பு' என்று எடுத்துக்கொள்கிறோம். இதன் வெளிப்பாடுதான் சமீப காலமாக தமிழ்நாட்டில்
"விவசாயி வெயில்லையும் , மழைலயும் கஷ்டப்படுறான். கம்பெனிக்காரன்/பெருமுதலாளி ac ரூம்ல உக்கார்ந்துகிட்டு சம்பாரிக்கறான்" னு பேசிகிட்டு இருக்காராங்க. ஆனால் ac ரூம்ல உக்கார்ந்துருக்கவனும் மூளையை கசக்கி, தூக்கம் கெட்டு, கஷ்டப்பட்டு, பிளான் பண்ணி ரிஸ்க் எடுத்துதான் ஒரு வேலையை நடத்துறான்.
உதாரணத்துக்கு
உங்கள் நண்பர் ஒருவர் ஒரு சிறிய ஹோட்டல் ஒன்று வைத்து நல்ல லாபகரமான முறையில் நடத்திவருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் நகரின் இன்னொரு பகுதியில் புதிதாக இன்னொரு கடை திறக்க நினைக்கிறார்.
எனவே அவர் உங்களிடம் வந்து, தன் கடையின் ஆண்டு அறிக்கை, லாபம் வரும் விதம், இன்னொரு கடையில் கிடைக்க போகும் வருமானம், அது செயல்பட போகும் விதம், எல்லாவற்றையும் விளக்குகிறார்.
தன் கடை தொடங்க 6 லட்சம் ரூபாய் தேவை படுவதாகவும், அதில் நம் இருவரும் ஆளுக்கு பாதி பாதியாக பகிர்ந்து கொள்ளலாம் என்று கேட்கிறார். அவர் working partner ஆகவும், நீங்கள் பணம் மட்டுமே கொடுக்கும் invester ஆக இருப்பதால் silent partner ஆகவும் இருந்துகொண்டு வரும் லாபத்தில் 60%-40% எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லுகிறார். இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? அவரின் ஆண்டு அறிக்கை, அவரின் லாப கணக்கு, கடை அமையபோகும் இடம், அந்த இடத்தின் சூழல் , அதன் எதிர்காலம் எல்லாவற்றையும் பார்த்து, யோசித்து, சரியென்று பட்டால் உங்கள் சேமிப்பை அதில் முதலீடு செய்து, முறைப்படி பதிவு செய்து, எழுதி வாங்கிக்கொள்வீர்கள்.
இதேதான் sharemarketலும் நடக்கிறது. ஒவ்வொரு கம்பெனியும் வெளியிடும் ஆண்டு அறிக்கை, அரசியல் சூழ்நிலை , எதிர்கால ப்ரொஜெக்ட்கள், பண மதிப்பு எல்லாவற்றையும் யோசித்து, கணக்கிட்டுத்தான் ஒரு முதலீடு செய்கிறோம். எனவே இதில் உழைப்பு இல்லையென்றோ, குதிரைப்பந்தயம் போல் 70% அதிர்ஷ்டத்தை நம்பி செய்வதென்றோ சொல்ல இயலாது brother.
Inverstmentல் longterm investment, short term investment என்று இரண்டு வகை உண்டு. இதில் இரண்டாவது வகையை வேண்டுமானால் குதிரைப்பந்தயம் என்று சொல்லலாம். ஏனெனில் இது குறுகிய கால லாப நோக்கத்துடன் செய்யப்படும் ஒரு ஆபத்தான இன்வெஸ்ட்மெண்ட். நிறைய பேர் இதில்தான் பணத்தை இழக்கிறார்கள்.