// உயிர்த்தெழுந்த இந்த பரிசுத்தவான்கள் யார்? //
நியாயமான கேள்விதான்...
இயேசு கிறிஸ்து அனேகரை உயிரோடு எழுப்பினார்.
இதையும் சொன்னார்.....
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.
யோவான் 14:12
மேற்கண்ட வசனத்திற்கு ஏற்ப பேதுருவும் தபீத்தாளை உயிரோடு எழுப்பினார்
அப்போஸ்தலர் 9 : 36 - 41
எனவே உயிரோடு எழும்புவது , உயிரோடு எழுப்புவது போன்ற அதிசயங்களை நிகழ்த்துவது , மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக தான்.
அதனாலேயே இயேசுகிறிஸ்து கீழ்க்கண்டவாறு கூறினார்
நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள், அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.
யோவான் 14:11
மக்களை நம்ப வைக்க கிரியைகள் தேவைப்பட்டன.
// இப்பொழுது எங்கே இருக்கிறார்கள் ? //
உயிரோடு எழுந்தவர்களுக்கு இரண்டாம் மரணம் இல்லை என்பதால் , அவர்கள் பூமியில் எங்கோ ஒரு இடத்தில் இருக்க வேண்டும். (மரித்தால் தான் பரதீசுக்கு செல்லமுடியும்)
அல்லது மறுரூபமாக்கப்பட்டு வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும்.
அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.
பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.
யோவான் 3:13
...... என்று வசனம் இருப்பதால் பூமியிலேயே தேடி பார்க்க வேண்டியதுதான்.
// இரண்டாம் வருகையில் தானே உயிர்த்தெழுதல் நடக்கும் என்று தெசலோனிக்கேயரில் எழுதி இருக்கிறது அப்படி என்றால் இது நடக்க காரணம் ? ( 1 தெசலோனிக்கேயர் 4 : 16-17) //
அது அப்போஸ்தலனாகிய பவுலின் பார்வை...
இரண்டாம் வருகையிலும் உயிர்த்தெழுதல் நடக்கும்....
// இவர்கள் மட்டும் விஷேசித்தவர்களா ஏனென்றால் வருகைக்கு முன் உயிர்த்தெழுந்து விட்டார்கள். //
விசேஷித்தவர்கள் என்றெல்லாம் இல்லை உயிர்த்தெழுந்த கணக்கு இவர்களிடம் இருந்து துவங்குகிறது என்று வைத்துக்கொள்ளலாம்.