General Category > Tamil Bible
மத்தேயு அதிகாரம் 7, வசனம் 21 முதல்
Aabith:
நான் ஒருபோதும் என்னை இறைவன் என்று சொல்லவில்லை, என்னை ஏன் கடவுள் என்று அழைக்கிறீர்கள்,என் பிதாவே கர்த்தர் என்று பொருள்படும் படியாக உள்ள வசனம் இருக்கிறது. அறிவார்ந்த மக்கள் இதற்கு விளக்கம் தர வேண்டுகிறேன்.
Harish Jershon:
சகோதரரே! நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்!
யோவான் 10:30
நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறாரே
Harish Jershon:
சகோதரரே! நீங்கள் எபிரேயர் 1வது அதிகாரத்தை வாசிக்கவில்லையா?
8வது வசனத்தில் இயேசு கிறிஸ்து தேவன் என்று ஆயிரம் வருஷத்திற்கு முன்பே சங்கீத புத்தகத்தில் எழுதி இருக்கிறது.
வேதாகமத்தில் அநேக இடத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உங்களுக்கு வாழ்த்துகிறோம் என்றும் எழுதி இருக்கிறது!
Harish Jershon:
இயேசு, தம்மை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லியும் தன் பிதாவின் சித்தத்தை செய்யாமல் போகிற ஜனங்களை அக்கிரமக்காரர்கள் என்று சொல்லியிருக்கிறார்!
மாம்சத்தின்படி ஒரே வசனத்தை பிடித்துக்கொண்டு கேள்வி கேட்காமல் வேதத்தை முழுமையாக அவை கேற்றபடி நிதானித்து ஆராய்ந்து அறிந்து கேள்வி கேளுங்கள்!
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
udaya:
யோவான் 10:30 , யோவான் 14:9 ...போன்ற வசனங்களைப் படித்தால் , இயேசுகிறிஸ்துவும் பிதாவும் ஒருவரே என்ற கருத்து வெளிப்படும்....ஆனால்....ஏசாயா 45:5,6,18 மற்றும் ஏசாயா 46:9 , ஏசாயா 43:10...போன்ற வசனங்களைப் படித்தால் , இருவரும் வேறு வேறு என்பது புலப்படும் . புதிய ஏற்பாட்டிலிருக்கும் " என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் " என்ற குரல் கூட இருவரும் வேறு வேறு என்பதை உணர்த்தும்...
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version