கர்த்தருடைய வடிவில் விளங்கியவர், வெறுமையாக்கி அடிமை வடிவில் மனிதரானார்.(பிலி 2:6,7) இந்த இயேசுவுக்கு தேவ சமூகம்,அவசியம். ஒருவிசை இயேசு பேதுரு யாக்கோபை யோவானை தனிமையாகக் கூட்டிப்போனார்.அங்கே தோற்றம் மாறினார். அவருடைய ஆடைகள் வெள்ளை வெளேரென ஒளிவீசின.அப்போது எலியாவும் மோசேயும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள்.(மாற்கு 9:2..4) இப்படிப்பட்ட அனுபவத்திற்காக தனிமையில் ஜெபிக்க போனார்.