Dear johny basker,
I hope u understnd tamil. Because im not very fluent in English
31 அப்பொழுது அவருடைய சகோதரரும் தாயாரும் வந்து ,வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள்.
மாற்கு 3:31
32 அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஜனங்கள் அவரை நோக்கி.இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள்.
மாற்கு 3:32
33 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக, என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி.
மாற்கு 3:33
34 தம்மைச் சூழ உட்காந்திருந்தவர்களைச் சுற்றிப்பார்த்து, இதோ, என் தாயும், என்சகோதரரும் இவர்களே.
மாற்கு 3:34
35 தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும்,எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார்.
மாற்கு 3:35
மத்தேயுவில் வரும் வசன ஆதாரம் ஏற்கனவே மேலே வேறொரு சகோதரரால் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இயேசுவுக்கு சகோதரர்களும், சகோதரிகளும் இருந்தது உண்மையாகிறது. அவர் கடைசி நேரத்தில் தன் தாயை , சீஷனிடம் ஒப்படைக்க காரணம் அவர் சகோதரர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளாத யூதர்களாய் இருந்ததிநிமித்தமாக இருக்கலாம்.
யோசேப்பு "இயேசு பிறக்கும் வரை அவளை அறியாதிருந்தான்" என்று வாசிக்கிறோம். அப்படியெனில் பிறந்த பின் அவளை அறிந்துகொண்டார் என்றே பொருளாகிறது.