நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்கவந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்கவந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
லூக்கா 12 :51
பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள், சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.
எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.
மத்தேயு 10 :34 , 35
____________________________________________________
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மேய்ப்பர்களுக்கு , அறிவித்த தூதர்கள் , பூமியில் சமாதானம் உண்டாவதாக , என்று சொல்லி துதித்தார்கள் . லூக்கா 2: 14.
ஆனால் , " சமாதான பிரபு " என்று கருதப்பட்ட இயேசு கிறிஸ்து , தான் சமாதானத்தை கொடுக்க வரவில்லை என்று கூறுவது ஆச்சரியமாக உள்ளது . மேலும் , பிரிவினையை உண்டாக்க வந்தேன் என்றும் கூறுகிறார் . அவர் ஏன் அப்படி கூறினார் ?